districts

பாஜகவின் கருத்து க(தி)ணிப்பு - வச்சு செய்த ஊடகவியலாளர்கள்

கோவை, ஏப். 15-  அண்ணாமலை வெற்றி பெரு வார் என கருத்து கணிப்பு என்கிற பெயரில் திணிக்க வந்தவர்களை, கோவை ஊடகவியலாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளால், அம்பலமாகி அலறியடித்து ஓடி னர். நாடாளுமன்ற தேர்தல் களம்  சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். கோவை தொகு தியை பொருத்தவரையில், திமுக மற்றும் அதிமுகவினரிடையே போட்டி உள்ளது. திமுக வேட்பா ளருக்கு வெற்றி பிரகாசமாக உள் ளது.  இந்நிலையில், களத்தில் ஒன்று மில்லாமல், வாக்குகளை பெற்று விட வேண்டும் என்பதற்காக, சாம,  பேத, தான, தண்டம் என அனைத்து  உத்திகளையும் பாஜக மேற் கொள்கிறது. தேர்தல் விதிமீறலில் ஈடுபடுவது, காவல்துறையினரிடம் சண்டைக்கு செல்வது, மறியல் செய்வது, பொதுமக்களை தாக்கி  ரவுடித்தனம் செய்வது என எதிர்ம றையிலாவது தனக்கு விளம்பரம் வேண்டும் என அலைகிறது. இந்நிலையில், கோவை நாடா ளுமன்ற தொகுதியில் யார் வெற்றி  பெறப் போகிறார்கள் என்பதற்கான கருத்துக்கணிப்பு முடிவுகளை ஐபிடிஎஸ் நிறுவனம் திங்களன்று கோவை பத்திரிகையாளர் மன் றத்தில் வெளியிட உள்ளதாக ஊடகத்திற்கு அழைப்பு வந்தது.  இதனை பாஜக செய்தி தொடர்பா ளர்கள் மெனக்கெட்டு ஊடகங்க ளுக்கு அழைப்பு விடுத்தனர். கருத்து கணிப்பு குறித்த செய்தி யாளர் சந்திப்பிற்கு பாஜக தரப்பி லிருந்து ஊடகங்களுக்கு அழைப்பு வந்தது பத்திரிகையாளர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது. இந்நி லையில், கருத்துக்கணிப்பு முடிவு களை வெளியிட தேர்தல் ஆணை யத்திடம் அனுமதி பெற வேண்டும்

 என மாவட்ட நிர்வாகம் சொன்ன தால், சாலையில் வைத்து அந்த நிறு வனத்தினர் கருத்துக்கணிப்பு முடி வுகளை வெளியிட்டனர். அப்போது  பாஜகவின் ஊடகப்பிரிவினர் மற்றும் பாஜக செய்தித்தொடர்பா ளர்கள் உடனிருந்தனர். ஐபிடிஎஸ் அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் முன்னிலையில் கருத் துக்கணிப்பு முடிவை வெளியிட் டார். அதில் கோவை நாடாளுமன்ற  தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 38.9 சதவீத வாக்கு களுடன் முதலிடம் பெறுவார், அதிமுக வெறும் 18 சதவிகிதம் வாக்குகளை மட்டும் பெறும் என்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள், 21 லட்சம் வாக்க ளர்களை கொண்டு கோவை தொகுதியில், வெறும் 3000 பேரி டம் பத்து நாட்களில் எடுக்கப் பட்ட கருத்துக்கணிப்பு எப்படி சரி யாக இருக்கும் என்றனர். இதற்கு,  தகுதி பெற்ற நபர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதாக பதில்  அளித்து சமாளித்தார் அந்நிறு வனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு. தகுதி வாய்ந்த நபர் கள் யார் என செய்தியாளர்கள் பதில் கேள்வி எழுப்ப பதில் சொல்ல  முடியாமல் தவித்த அவர், ஜூன்  5ஆம் தேதி இந்த முடிவு வர வில்லை என்றால் நான் ராஜின மாக செய்வேன் என்றார். நீங்கள்  ராஜினமா செய்வது இருக்கட்டும், உங்களின் ஊடக சந்திப்புக்கு பாஜகவினர் ஏன் அழைப்பு விடுத் தனர் என அடுத்த கேள்வி எழுப்ப,  என்ன பதில் சொல்வது என தெரி யாமல் விழித்தனர். அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என  சொல்ல, அப்படியென்றால் உங்கள் செய்தியாளர் சந்திப்புக்கு  பாஜக நிர்வாகிகள் ஏன் வந்திருக்கி றார்கள் என கேட்க, உடனடியாக அங்கிருந்து பாஜகவினர் நைசாக நழுவி சென்றனர். கருத்து கணிப்பு  என்கிற பெயரில் திணிப்பை நடத்த  வந்தவர்களும் விட்டால் போதும் என ஓட்டம் எடுத்தனர்.  இந்த ஊடக சந்திப்பு நடந்து  கொண்டிருக்கும்போதே, அப்பகு தியைச் சேர்ந்த ஒருவர், இந்த வீதி யில் 750 ஓட்டு இருக்கு, இதில் 5  ஓட்டுக்கு மேல பாஜக ஒரு ஓட்டு  கூட வாங்கிருச்சுன்னா, நான் இங்கி ருந்து வீட்டையே காலி பன்னிக்கி றேன் என்றார் அதிரடியாக. அங்கி ருந்த மற்றொருவர், அண்ணா மலை. அண்ணாமலை ஜெயிப்பா ருன்னு சொல்றார். அண்ணாமலை யாருங்க என்றாரே மொத்த ஊட கத்தினரும் வயிறு வலிக்க சிரிக்க  மொத்த பாஜக கூட்டமும் தெறித்து  ஓடியது.  மூன்று சதவிகித வாக்கு – வேலுமணி விமர்சனம் இதுகுறித்து, அதிமுக முன் னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், 3 சதவிகித வாக்கு வைத்திருக்கும் பாஜகவால் எப்படி வெல்லமுடியும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தயவால்தான் கோவையில் பாஜக  ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.  ஆட்களை பிடித்து போலியான கருத்துகணிப்புகளை வெளியிட் டுள்ளார்கள். முதலில் களத்தில் பூத்தில் வேலை செய்வதற்கு ஆட் களை போடட்டும். பாஜகவினர் வாட்சப், யூ டூயூப்களில்  மட்டுமே அரசியல் செய்துவருகிறது என்றார்.