பொள்ளாச்சி, மார்ச் 27- ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வனத்துறை யினர் சனியன்று பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப் பகம் வால்பாறை, மானாம் பள்ளி, உலாந்தி, பொள் ளாச்சி, உடுமலை, அமராவதி என ஆறு வனசரகமும், வெளி மண்டல பகுதியான கொடைக்கானலையும் உள்ளடக்கி யது. இங்கு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டுமாடு, புலி, சிங்கவால் குரங்கு, செந்நாய், புள்ளிமான், வரையாடு, இருவாட்சி பறவை உள்ளிட்ட அரியவகை பறவையினங் கள், தாவரங்கள் நிறைந்து உள்ளது. இந்நிலையில், நடப் பாண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி சனியன்று துவங்கியது. இதுகுறித்து பொள்ளாச்சி ஆனைமலை புலி கள் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவுப்படி, ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்தில் மார்ச் 26, 27 ஆகிய பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. பொள்ளாச்சி கோட் டத்தில் உள்ள பகுதிகளில், நேர்க்கோட்டு பாதை அமைத்து பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.