கோவை, ஜூலை 5- பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டி, பாரதியார் பல்கலைக் கழக அலுவலர்கள் பதிவாளர் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பாரதியார் பல்க லைக்கழக அலுவலர் சங்கத்தி னர், தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பொதுக்குழு கூட் டம் நடத்த பதிவாளரிடம் அனுமதி கோரினர். ஆனால், பல்கலைக்கழக பதிவாளர் ரூபா குணசீலன் அனுமதி மறுத்துவிட்டதாக சொல் லப்படுகிறது. இதைக் கண்டித்து அலுவலர் சங்கத்தினர், வெள்ளியன்று பதிவாளர் அறையை முற்றுகையிட்டனர். பின்னர், பதி வாளர் அறையிலேயே அமர்ந்து கொண்டு பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி மறுப் பதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக பதிவாளர் இது குறித்து உரிய பதில் அளிக்கவில்லை. இதை யடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். ஜூலை 8 ஆம் தேதியன்று மீண்டும் போராட்டத்தை தொடர போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.