திருப்பூர், மார்ச் 5- திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 30 பேர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்று கல்லூரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார். கோவை பாரதியார் பல்கலைக் கழக மார்ச் 2021 தேர்வுகள் நடைபெற்றதில், எல்ஆர்ஜி கல்லூரி இளங்கலைப் பிரிவைச் சேர்ந்த 8 மாணவிகள், இளம் அறிவியல் பிரிவைச் சேர்ந்த 14 மாணவிகள், முதுகலை பிரிவில் 5 மாணவிகள், முது அறிவியல் பிரிவில் 3 மாணவிகள் என மொத்தம் 30 பேர் பல்கலைக் கழக தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்று முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.