districts

img

பகத்சிங் 117ஆவது பிறந்தநாள்: வாலிபர் சங்கத்தினர் மரியாதை

திருப்பூர், செப்.28- சுதந்திர போராட்ட வீரர், புரட்சியாளர் தோழர் பகத்சிங்கின்  117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் வாலிபர் சங் கத்தினர் பகத்சிங்கின் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். வேலம்பாளையம்: வாலிபர் சங்க வேலம்பாளையம் கிளை சார்பில் வெள்ளி யன்று பகத்சிங்கின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து,  மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வேலம்பாளையம் நகரக்குழு உறுப்பினர் எஸ்.மதியரசு தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், மாவட்டத் தலைவர் எஸ்.அருள், புரட்சி யாளர் பகத்சிங் குறித்து பேசினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்த கோபால், கிளைச் செயலாளர்கள் சி.சுப்பிரமணியம், எஸ். வசந்தி, வி.ஆர்.சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். அங்கேரிபாளையம்: பகத்சிங் பிறந்தநாள் விழா சனியன்று வாலிபர் சங்க அங் கேரிபாளையம் கிளை சார்பில் கொண்டாடப்பட்டது. இதில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செய லாளர் ஆர்.காளியப்பன், வாலிபர் சங்க நிர்வாகிகள் கதிர்,  நரேந்திர பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.