districts

img

பகத்சிங் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம், மார்ச் 23- தேச விடுதலை போராட்ட மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி மாண வர், வாலிபர் சங்கத்தினர் கொடியேற்றி, செவ்வணக் கம் செலுத்தினர். சேலம் வடக்கு மாநகரம், சாமிநாதபுரம் சின்னேரி வயல்காடு ஆலமரக்காடு, அங்கம்மாள் காலனி ஆகிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.வெங்கடேஷ் கொடி ஏற்றினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.பிரவின்குமார், மாநகரத் தலைவர் பி.சதீஷ்குமார், மாநகர நிர்வாகி கள் கதிர்வேல், நாகராஜ், சசிக்குமார்,  ரம்யா, மாந கரக்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

கோவை

இந்திய மாணவர் சங்கததின் சார்பில் கோவை அரசு கலைக் கல்லூரியில் மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தியாகிகளின் நினைவை போற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் ஏராளமான மாண வர்கள் பங்கேற்றனர்.