districts

img

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் முற்றுகை

திருப்பூர், ஏப்.5- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர்  8ஆவது வார்டு பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர்  விநியோகம் செய்யப்படவில்லை. தண்ணீர் இல்லாததால், அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத  சூழல் உருவாகியுள்ளது. கூலி வேலைக்கு செல்வோர் காசு  கொடுத்து தண்ணீர் வாங்குகின்றனர்.  பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு மாருதி  நகர் பகுதிக்கு உடனடியாக லாரி மூலமாக குடிநீர் விநியோகம்  செய்ய வேண்டும் எனவும், சாக்கடை, தெருவிளக்கு போன்ற  அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, 40க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன், ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.