2006 முதல் 2011 வரை கலை ஞர் மு.கருணாநிதி தலைமை யில் திமுக ஆட்சியில் இருந்த போது கோவை மாநகரம், ஒண்டிப் புதூரை அடுத்த எஸ்ஐஎச்எஸ் காலனியில் ரயில்வே இருப்பு பாதையை கடக்க மேம்பாலம் கட் டப்பட்டது. ஏறக்குறைய மேம்பா லப் பணிகள் முடிவுற்ற நிலையில் ஒரு சிறுபகுதியை கட்டி முடித்தால் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எண்ணியிருந்த நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் கடந்த பத்தாண்டு கால மாக மீதமுள்ள பணிகளை முடிக் காமல் அதனை அப்படியே முடக் கிப் போட்டது கடந்த அதிமுக அரசு. இதன்விளைவாக தீவில் சிக்கிக் கொண்டது போல எஸ்ஐஎச்எஸ் காலனி மக்கள் அன்றாடம் வேதனை அனுபவித்து வருகின்றனர். இப் போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்து மேம்பால நிறைவு பணிகளை மேற்கொள்ள உத்த ரவை பிறப்பித்துள்ளது. இதைப்போலவே சூலூரில் அன் றைய கலைஞர் ஆட்சிக் காலத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 240 அடுக்கு மாடி தொகுப்பு வீடுகள் கட்டி முடிக் கப்பட்டது. ஆனால், இதன்பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அவ்வீடுகள் உரிய நேரத்தில் சம் மந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்ப டைக்கவில்லை. அதேநேரம், இதைத் தொடர்ந்து ஆட்சி வந்த அதிமுக அரசு, முந்தைய திமுக அரசின் மேல் இருந்த காழ்புணர்ச்சியின் காரண மாக கட்டப்பட்ட அந்த தொகுப்பு வீடு களை பயனாளிகளுக்கு ஒதுக்காமல் அதனை கிடப்பில் போட்டது. அவை இன்று வரை பயனாளிகளுக்கு போய் சேராததால் அவ்வீடுகள் பாழ டைந்த குடியிருப்புகளாக காட்சி யளித்து வருகிறது.
இதுகுறித்த விவரம் வருமாறு, சூலூர் பேரூராட்சிக்குட்பட்ட 7 ஆவது வார்டு புதுநகர் என அழைக்கப்படு கிற திருவள்ளுவர் காலனியில் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தின் மூலம் 12 ஆவது நிதிக்குழுவின் கீழ் 2006 ஆம் ஆண்டில் 108 வீடுகள் 316.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோன்று, அதே பகுதியில் 2009 ஆம் ஆண்டில் ரூ.625 லட்சம் மதிப்பீட்டில் 240 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வீடுகள் கலைஞர் ஆட்சிக்காலத்தி லேயே கட்டியும் முடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சிக்கு வந்த அதி முக அரசு வீடுகளை உரிய பயனாளி களுக்கு வழங்காமல் வஞ்சித்து விட்டது. கடந்த பத்தாண்டு காலமாய் எவ்வித பராமரிப்பு இல்லாததால் வீடு கள் தற்போது பாழடைந்து உள் ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் சூலூர் பேரூராட்சியின் 7 ஆவது வார்டு உறுப்பினர் வேலுச்சாமி கூறு கையில், சாலை விரிவாக்கத்திற் காகவும், நீர்நிலை ஓரம் என்று கூறி யும் ஏழை எளிய மக்களை அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து அரசு நிர் வாகம் அப்புறப்படுத்துகிறது. அத் தகைய நேரங்களில் கடும் எதிர்ப்பு எழும்போது, இவர்களுக்கு அரசு கட்டும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்குகிறோம் என உத் தரவாதம் அளிக்கின்றனர். இதற் கான டோக்கனும் வழங்கப்படுகிறது. இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் டோக்கனை கையில் வைத்துக் கொண்டு வீடு கிடைத்துவிடும் என் கிற நம்பிக்கையோடு நாள்தோறும் அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருகிறார்கள். அதேநேரம் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைக்கூட இம்மக்களுக்கு வழங்காமல் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டி வரு கின்றனர். இதன்காரணமாக வீடுகள் பாழடைந்து மக்களின் வரிப்பணம் தான் விரயமாகிறது என்பதை ஆட்சி யாளர்கள் உணர வேண்டும்.
இந்த புதுநகர் பகுதியில் உள்ள 240 வீடுகளின் நிலையும் இதுதான். கலைஞர் ஆட்சிக் காலத்தில் கட்டி யது என்ற ஒரே காரணத்திற்காக கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி யில் இருந்த அதிமுக அரசு பயனாளி களுக்கு வீடுகளை ஒதுக்காமல் வஞ்சித்து வந்தது. தற்போது மீண்டும் திமுக அரசு ஆட்சியில் அமர்ந்துள் ளது. இதேபோல், உள்ளாட்சி தேர் தல் நடைபெற்று பேரூராட்சி உறுப் பினர்கள், தலைவர்கள் தேர்வு செய் யப்பட்டுள்ளனர். ஆகவே, இந்த 240 வீடுகள் குறித்து பேரூராட்சியின் கவ னத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். இந்த கட்டிடம் குறித்து உரிய ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தரமான வீடுகளை உரிய பயனாளிக்கு ஒப்படைக்க வேண்டும். இதேபோல், தண்ணீர், மின்சாரம் ஆகிய இணைப்புகளை தர வேண்டும் என்றும், பேருந்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பதையும் சம்மந்தப்பட்ட ஆட்சி யாளர்களிடமும், அரசு அதிகாரிகளி டமும் வலியுறுத்தி வருகிறேன் என் றார். இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் சூலூர் தாலுகா செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், நாங் கள் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத் திற்கு வந்தபோது இப்பகுதி மக்கள் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பாழ டைந்து வருவதை கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். இந்த சூலூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வீடின்றி தவித்து வருகிறார்கள். அவ்வப்போது, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகளிடம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை ஒதுக்கித்தர வேண்டும் என மனுகொடுத்து முறையிட்டு வரு கின்றனர். வாலிபர் சங்கத்தின் தலைமையிலேயே இத்தகைய பல போராட்டங்களும் நடத்தியுள்ளோம். ஆனால், கடந்த அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப் போது திமுக அரசு உள்ளதால் உடன டியாக தலையிட்டு உரிய பயனாளி களுக்கு வீடுகளை ஒதுக்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.
-அ.ர.பாபு, கோவை.