districts

img

மகசூல் பாதிப்பால் பீட்ரூட் விவசாயிகள் வேதனை

உதகை, ஜன.20- கோத்தகிரியில் மலைக் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டுக்கு உரிய விலை இருந் தும், விளைச்சல் இல்லாததால் விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயி லைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறி களான உருளைக்கிழங்கு, முட்டைக் கோஸ், கேரட், பீட்ரூட் அதிகளவில் விளை விக்கப்படுகின்றன. இந்நிலையில் நெடு குளா, ஈளாடா, பட்டக்கொரை, கதகட்டி,  கைக்காட்டி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் பீட்ரூட் விவசா யம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப் பாண்டு அதிக மழைப்பொழிவு காரணமாக மலை காய்கறிகளின் விளைச்சல் மிகக் குறைந்த அளவே உள்ளது. இதனால், சம வெளிப் பகுதி சந்தைகளில் தற்போது பீட் ரூட் கிலோவிற்கு ரூ.70 முதல் ரூ.80 வரை விற் பனையாகிறது. போதுமான விலை இருந் தும், விளைச்சல் இல்லாததால் பீட்ரூட் பயி ரிட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந் துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தற்போது பீட்ரூட் விலை எதிர் பார்த்த அளவிற்கு கிடைத்துள்ளது. ஆனால், மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் மிகக் குறைந்த அளவே உள்ளது. எனவே,  ரூ.800க்கு விற்பனையாகின்ற உரம் வாங்கு வதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அதிகளவு பீட்ரூட் பயிரிட்டு விலை இருந் தும் விளைச்சல் இல்லாததால் மிகுந்த ஏமாற் றம் அடைந்துள்ளோம், என வேதனை தெரி வித்துள்ளனர்.