சேலம், ஏப்.10- கலப்பு திருமணம் செய்த எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த தர்மகர்த்தா மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என தம்பதியர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் - ஜானகி தம்பதியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் திங்களன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர் ஆட்சி யர் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதுகுறித்து ஜானகி கூறுகையில், நான் மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவள். வேறு சமூகத்தை சேர்ந்த செந்தில் குமாரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், வீர பாண்டி அருகே உள்ள அரசம்பாளையம் ஊர் தர்மகர்த்தாக்கள் எங்கள் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர். இது சம் பந்தமாக வீரபாண்டி பஞ்சாயத்து தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து, ஊர் தர்ம கத்தா எந்த கோவிலுக்கும் செல்லக்கூடாது. எந்த வீட்டுக்கும் செல்லக்கூடாது யாரையும் சந்திக்க கூடாது எனக் கூறி எங்களை ஒதுக்கி வைத்து விட்டனர். எங்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டின் உரிமையாளரையும் ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் எந்த பொருளும் வாங்க முடியாமலும், வாழவும் முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து தர்மகர்த்தாவிடம் கேட்டதற்கு எங்கள் சாதி பெயரை சொல்லி கேவலமாக பேசியும், மிரட் டினார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மிரட்டி கேவலப் படுத்தி உள்ளனர் வழக்கும் பதிவு செய்யா மல் மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் எங்களை இழிவாக பேசிய தர்மகர்த்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரி வித்தார்.
கிணற்றை கானோம்
பெத்தநாயக்கன்பாளையம், கொட்ட வாடி ஊராட்சி பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கொட்டபாடி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் ரேஷன் கடை உள்ளிட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதே பகுதியில், கடந்த 60 ஆண்டு காலமாக மக் கள் பயன்படுத்தி வந்த கிணறும் அங்கு உள் ளது. இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் அரசு நிலத்தை அபகரித் தது கிணற்றை மறைத்து வீடு கட்டி வருகி றார். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி
காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த குமார் மற் றும் விஜயலட்சுமி தம்பதியினர் அளித்த மனு வில், கடந்த 2014ஆம் ஆண்டு எனது மனை விக்கு கால்நடை உதவியாளர் பணிக்கு விண் ணப்பித்திருந்தேன் அப்போது வேல்முருகன் என்பவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலையின் மைத்துனர் எனக் கூறினார். நீங்கள் விண்ணப்பித்த கால்நடை உதவியாளர் பணி ஆனையை நான் வாங்கி தருவதாகவும், அதற்கு நான்கு லட்சம் வழங்க வேண்டும் எனவும் வேல்முருகன் கூறினார். இதனை நம்பி ரூ.4 லட்சம் கொடுத்தேன். கடந்த 8 ஆண்டாக அரசு வேலையும் வாங்கித் தரவில்லை. பணமும் வாங்க முடியவில்லை. இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுத்து எங்கள் பணத்தை பெற்று தர வேண்டும். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.