உதகை, பிப்.2- குஜராத் கலவரம் குறித்து, பிபிசி ஊடகம் வெளியிட்ட ஆவண படத்தை பார்ப்பவர்களை கைது செய்வதை கண்டித்தும், இந்த ஆவண படத்தை மக்கள் மத்தி யில் கொண்டு செல்லும் விதமாக சாலையில் அமர்ந்து செல்போனில் பார்த்து நூதன போராட்டத்தில், சிபிஎம், வாலிபர் சங்கத்தினர் ஈடு பட்டனர். குஜராத் கலவரத்தில், அன் றைய முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு நேரடி தொடர்பு இருப்ப தாக குற்றஞ்சாட்டி, பிபிசி ஊடகம் ஆதாரத்துடன் ஆவணப்படத்தை வெளியிட்டது. இப்படம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மை முகத்தை அம்பலப் படுத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தை ஒன்றிய பாஜக அரசு இந்த ஆவணப் படத்தை பார்ப்பதற்கு தடை செய்து உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள இளை ஞர்கள், பொதுமக்கள் அவரவர் செல்போன் மூலம் இப்படத்தை கண்டு வருகின்றனர். மேலும், இடது முன்னணி ஆட்சி செய்யும் கேரளா மாநிலத்தில் வாலிபர் சங்கத்தினர் பொது இடங்களில் திரையிட்டு மோடியின் முகத் திரையை கிழித்து வருகின்றனர். இதேபோன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலை கழ கங்கள், கல்லூரிகளின் மாண வர்கள் தன்னிச்சையாக இப் படத்தை திரையிட்டு வருகின்றனர். இதனால், மோடி தலைமையிலான பாஜக அரசு, பல்வேறு அடக்கு முறை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. தமிழ் நாட்டில் பல இடங்களில் இப் படத்தை திரையிட அனுமதி மறுப் பதும், கைது உள்ளிட்ட நடவடிக் கைகளை மேற்கொள்வதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள் ளது.
இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்கெட் பகுதியில் சிபிஎம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப் புகளின் சார்பில் பிபிசி ஆவணப் படத்தை பார்க்கும் போராட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் நீலகிரி மாவட்டத் தலைவர் மணி கண்டன் தலைமையில் சாலையில் அமர்ந்து செல்போன் மூலம் குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை பார்க்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ், வாலிபர் சங்க தாலுகா செயலாளர் பகத்சிங், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் யோகராஜா, தாலுகா செயலாளர் சச்சின், மக்கள் அதி காரம் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.