districts

img

மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பேட்டரி வாகனங்கள்

கோவை, ஜன.11- திடக்கழிவு மேலாண்மை பணிக ளுக்கான ரூ.10 லட்சம் மதிப்பிலான பேட்டரி ஆட்டோக்களை வீட்டு  வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் முத்துசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத் தார்.  இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்த முத்து சாமி கூறுகையில், கோவை மாநக ராட்சியில் 68 சதவீதம் சாலை பணி கள் முடிக்கப்பட்டுள்ளது. 760 பணி கள் தற்பொழுது நடைபெற்று வரும்  நிலையில், 445 பணிகள் தொடங்கு வதற்கான ஆயத்த பணிகள் நடை பெற்று வருகிறது. தற்போது டெங்கு பரவுகின்ற சூழ்நிலை இருப்பதால் சுகாதார மையங்களில் கூடுதல் மருத்துவர் கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்க பட்டுள்ளனர். டெங்கு கொசு ஒழிப்பு  பணிகளுக்காக  ஆயிரம் பணியா ளர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் வீடு மற்றும் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வும் அறிவுறுத்தியுள்ளது. முதலீட் டாளர்கள் மாநாடு மூலம் ஏழு லட்சம்  கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வந்துள்ளது. 636 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 27 லட் சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கொரோனா நோய் தொற்றை பொருத்தவரை கேரளாவில் இருந்து  வருபவர்களை கண்காணித்து வரு கிறோம். அதுமட்டுமின்றி, விமான நிலையம், ரயில் நிலையம் உள் ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தியுள்ளோம். வீட்டுவசதி வாரித்தின் கீழ் பத்திரம் இல்லாமல் இருக்கும் வீடுகளை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.