திருப்பூர், ஜன.19- திருப்பூர் மாநகராட்சி 57 ஆவது வார்டு திருக்குமரன் நகர் பகுதியில் சாக்கடை, தார் சாலை, தெரு விளக்கு மற்றும் குடிநீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி இப் பகுதி மக்கள் மாநகராட்சி அலுவ லக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட திருக்குமரன் நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நூற் றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இங்கு எவ்வித அடிப்படை வச தியும் இல்லை. மேலும், சாக்கடை வசதி இல்லாததால் வீட்டின் முன் பாகவே சிமெண்ட் வளையத் தொட்டி அமைத்து குழியில் கழிவு நீர் சேகரிக்கும் நிலை உள்ளது. இங்கு சேகரமாகும் கழிவுநீரை உறிஞ்சி எடுத்துச் செல்வதற்கு மாநகராட்சி கழிவுநீர் வாகனம் வருவதில்லை. கழிவுநீர் தேக்கத் தால் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்த் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே வாரம் ஒரு முறை கழிவுநீர் சேகரிக்கும் வாக னம் இப்பகுதிக்கு வந்து செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், திருக்குமரன் நகர் 1ஆவது வீதியில் சாக்கடை, தெரு விளக்கு, தார் சாலை, குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். அதேபோல் இங்குள்ள மின் கம் பம் ஒன்று வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காற்றடிக்கும்போது மின் கம்பி கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பி டிக்கும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கம்பங் களை அகற்ற பல முறை அதிகாரி களிடம் மனு அளித்தும், மின்வா ரிய ஜே.இ., நேரில் பார்வையிட்டு ரூ.50 ஆயிரம் செலுத்தினால்தான் மின் கம்பத்தை அகற்ற முடியும் என்று தெரிவித்திருக்கிறார். எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பிரச்சனையில் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பா.லட் சுமி, இப்பகுதியைச் சேர்ந்த சி.பர மசிவம் உள்பட இப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தரை யில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்ட னர். இதைத்தொடர்ந்து அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தி அனை வரையும் கலைந்து போகச் செய்த னர்.