districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தருமபுரி தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு

தருமபுரி தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு தருமபுரி, மார்ச் 27- தருமபுரி மக்களவை தொகுதி தேர்தல் பொதுப் பார்வை யாளர் அருணா ரஜோரியா புதனன்று, தொகுதிக்குட்பட்ட பகு திகளில் ஆய்வு மேற்கொண்டார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2024யை முன்னிட்டு,  தருமபுரி மக்களவை தொகுதி தேர்தல் பொதுப் பார்வை யாளராக அருணா ரஜோரியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நி லையில், தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த அருணா  ரஜோரியா, பொதுப்பணித்துறை பயணியர் மாளிகை யில் மாவட்ட தேர்தல் அலுவலர் கி.சாந்தி, காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோருடன் தேர்தல் பணி கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதுகு றித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கி.சாந்தி கூறுகையில், தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள், தேர் தல் தொடர்பான புகார்கள் குறித்து தேர்தல் பொதுப் பார்வை யாளரின் 9363962216 என்ற கைபேசி எண்ணில் அல்லது generalobs2024.dpi@gmail.com என்ற மின்னஞ்சல் முக வரியிலும் தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் பொதுப் பார்வை யாளரது தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள வட்டாட் சியர் எஸ்.ரேவதியின் கைபேசி எண்: 99943 90925 என்ற  எண்ணையும் தொடர்பு கொள்ளலாம், என்றார். இதனைத் தொடர்ந்து தருமபுரி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வட்டாட்சி யர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்ப திவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையினை அருணா ரஜோ ரியா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வரு வாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், உதவி தேர்தல்  நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி  உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை 4 பேர் கைது; ரூ.1.50 லட்சம் அபராதம்

காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை 4 பேர் கைது; ரூ.1.50 லட்சம் அபராதம் தருமபுரி, மார்ச் 27- பென்னாகரம் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்த 4 பேரை வனத்து றையினர் கைது செய்து, அவர்களுக்கு ரூ.1.50 லட்சம் அப ராதம் விதித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள  பதனவாடி காப்புக்காடு பாதுகாக்கப்பட்ட வனப்பகு தியாகும். இங்கு நெருப்பூர் சிறுதங்கள் மேடு பகுதியில் அடை யாளம் தெரியாத நபர்கள் சிலர் காட்டுப்பன்றிகளை கன்னி  வலை வைத்து வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவ லருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட வன  அலுவலர் ராஜாங்கம் உத்தரவின் பேரில், பென்னாகரம் வன சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர் சக்தி வேல், வனக் காப்பாளர் சங்கர், கணேஷ், செல்வகுமார் உள் ளிட்ட வனகுழுவினர் பதனவாடி காப்புக்காடு நெருப்பூர் சிறு தங்கள் மேடு வனபகுதியில் தீவிர ரோந்து பணியில் மேற் கொண்டனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த மணி முத்து (33), ஆத்து மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண் ணன் (32), சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த அபிராமன் (37), பண்ணவாடியான் காடு பகுதியைச் சேர்ந்த வன்னியன் (50)  ஆகிய 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது 4 பேரும் சேர்ந்து கன்னி வலை வைத்து காட் டுப்பன்றியை பிடித்து, அதனை வெட்டி இறைச்சி துண்டு களாக்கி 10 பொட்டலங்களாக கட்டி விற்பனை செய்ததை ஒப் புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 4 பேரை கைது செய்த  வனத்துறையினர் அவர்களிடமிருந்து அபராதமாக ரூ. 1,50,000-யை வசூலித்தனர். வனப்பகுதியிலோ அல் லது வனத்தை வெளியே வரும் வனவிலங்குகளை வேட் டையாடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு  மட்டுமல்லாமல், சிறைக்கு அனுப்பப்படும் என வனத்துறை யினர் எச்சரித்தனர்.

திமுக செயல்வீரர்கள் கூட்டம்


திமுக செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல, மார்ச் 27- மக்களவை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் நவ லடி தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பேசுகையில்,  அதிமுக ஆட்சியின்போது கொரோனா நிவாரண நிதி  ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு  வந்தவுடன் ரூ.4 ஆயிரத்தை இரு தவணையாக வழங்கியது.  நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், சேந் தமங்கலம் - எருமப்பட்டி குடிநீர் திட்டம், மோகனூர் தனிக்கு டிநீர் திட்டம், நாமக்கல் புறவழிச்சாலை போன்ற பல்வேறு திட் டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மோகனூர் அருகே ரூ.90  கோடியில் நவீன பால்பண்ணை அமைய உள்ளது. இதன் மூலம் 12,500 விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுவர். மக்க ளவை தேர்தல் முடிவுக்கு பிறகு, மேலும் பல்வேறு மக்கள்  நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது, என்றார்.

இளைஞருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு:  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் மார்ச்.27- ஐஏஎஸ்-க்கு படித்து வந்த இளைஞ ருக்கு ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடும், புதிய  கையடக்க கணினியையும் வழங்க நாமக்கல்  மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கோட்டை ரோட் டில் வசித்து வருபவர் ஜீவன் ராஜ் (24). இவர்  ஐஏஎஸ் தேர்வுக்காக படித்து வருகிறார். பயில்வதற்கு ஏதுவாக கையடக்க கணினி (tablet) ஒன்றை அமேசான் ஆன்லைன் வணிக தளத்தில் வாங்குவதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரூபாய்.  21,091 செலுத்தியுள்ளார்.  இதனையடுத்து அமேசான் நிறுவனத் தின் விற்பனையாளரான திருவள்ளூர் மாவட் டம், பொன்னேரி அருகே உள்ள புதுவயல்  துறையில் இருக்கும் அபாரியோ ரீடெய்ல்  பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மாணவ ருக்கு கையடக்க கணினி ஒன்றை அனுப்பி  வைத்துள்ளது. பின்பு ஜீவன் ராஜ் கைய டக்க கணினியை வாங்கி உபயோக்க தொடங் கிய போது அதன் தொடுதிரை (touch screen)  சரிவர வேலை செய்யவில்லை.  பின்பு கையடக்க கணினியின் உற்பத்தி யாளர் நிறுவனத்தின் சேவை மையத்தில் பழுதை நீக்க மூன்று முறை கொடுத்தும் பழுது  நீக்கப்படவில்லை. இது குறித்து பொருளை  உற்பத்தி செய்தவருக்கும் விற்பனை செய்த வருக்கும் மின்னஞ்சல் அனுப்பியும்   பிரச்சி னையை சரி செய்து தரப்படவில்லை. இதனால் மனமுடைந்த ஜீவன் ராஜ் நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த  2023 ஜூலை மாதத்தில் வழக்கு தாக்கல் செய் தார்.  இவ்வழக்கு விசாரணை நடைபெற்று,  இதன் தீர்ப்பை நீதிபதி வீ.ராமராஜ், உறுப் பினர் ஆர்.ரமோலா ஆகியோர்  வழங்கினர். இத்தீர்ப்பில், கையடக்க கணினியின்  உற்பத் தியாளரும் விற்பனையாளரும் குறைபா டான பொருளை விற்றதுடன், சேவை குறை பாடும் புரிந்துள்ளார்கள் என்று தெரிவித்துள் ளனர். மேலும் 2019 ஆம் ஆண்டு நடைமு றைக்கு வந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டப் படி குறைபாடு உள்ள பொருளை விற்ப தன் மூலம்   வாடிக்கையாளருக்கு சிரமம் ஏற் பட்டால், குறைபாடான பொருளின் உற்பத்தி யாளர் மற்றும் அதனை வாடிக்கையாள ருக்கு விற்கும் விற்பனையாளர் பொறுப் பாவார்கள். குறைபாடு உள்ள பொருள் விற் கப்பட்டது என்றும் பழுது நீக்க சேவையை  உற்பத்தியாளரின் சேவை மையம் வழங்க வில்லை என்றும் புகாரை தாக்கல் செய்த வர் நிரூபித்துள்ளதாக தீர்ப்பில் கூறப்பட் டுள்ளது. இதனால் வழக்கு தாக்கல் செய்த இளைஞருக்கு நான்கு வார காலத்துக்குள் புதிதாக கையடக்க  கணினி ஒன்றை வழங்க வும் அல்லது அவர் செலுத்திய தொகை ரூபாய். 21,091-யை வழங்கவும் மேலும் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட சிர மங்களுக்கு இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சம்  வழங்கவும் வழக்கின் செலவு தொகையாக ரூ. 5,000 -யை வழங்கவும் கையடக்க கணினி யின் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையா ளர்களுக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் சிறையில் நூலகம் திறப்பு

சேலம், மார்ச் 27- சேலம் பெண்கள் சிறையில் அமைக்கப்பட்டுள்ள நூல கத்தை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் திறந்து வைத் தார். சேலம் பெண்கள் சிறையில் உள்ள கைதிகள் படித்து  பயன்பெறும் வகையில் நுலகம், தையல்கூடம், கைதிக ளின் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் விளையாடுவதற்கு குழந்தைகள் விளையாட்டு அரங்கம் ஆகியவை அமைக் கப்பட்டுள்ளது. இதனை கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முசுந்தரம் திறந்து வைத்தார். மேலும், சிறை  வார்டன்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் தையற் கூடத்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய சிறை  கண்காணிப்பாளர் வினோத், சேலம் மண்டல நன்னடத்தை அலுவலர் சகாய ஆல்பர்ட் உள்பட சிறைத்துறை அதி காரிகள் கலந்து கொண்டனர்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கோளாறு: மின் உற்பத்தி நிறுத்தம்

சேலம், மார்ச் 27- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600  மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள் ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்  நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல் பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 ஆவது அலகில் 600  மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம்  600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடி யும். இந்நிலையில், இரண்டாவது பிரிவில் கொதிகலனில் ஏற்பட்ட குழாய் வெடிப்பு கார ணமாக 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி  தடைப்பட்டுள்ளது. கொதிகலன் குழாய் வெடிப்பை சரி செய்யும் பணியில் பொறியா ளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

‘தேர்தல் அழைப்பிதழ்’ வழங்கல்

நாமக்கல், மார்ச் 27- திருச்செங்கோட்டில் நகராட்சி நிர்வா கம் சார்பில் வீடு, வீடாக சென்று தேர்தல்  அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்று  வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் 2024 நடைபெற  உள்ள நிலையில், 100 சதவிகித வாக்குப்ப திவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.  இதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட ஆட் சியர் ச.உமா உத்தரவின் பேரில், நகராட்சி ஆணையாளர் சேகர் அறிவுறுத்தலின் பெய ரிலும், வீடு வீடாக சென்று நகராட்சி சார்பில்,  தேர்தல் அழைப்புகள் திருமண அழைப்பி தழ் வடிவில் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. துப்புரவு அலுவலர் வெங் கடாசலம் தலைமையில் கொசு ஒழிப்பு பணி யாளர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பெண்  பணியாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். தங்களது வாக்குச் சாவடியை அறிந்து கொள்ள பத்திரிக்கை யில் கியுஆர் கோடு உள்ளது. அதனை ஸ்கேன்  செய்து அறிந்து கொள்ளவும் என பணியா ளர்கள் கூறினர்.

உலக நாடக தின சிறப்புக் கருத்தரங்கம்

உலக நாடக தின சிறப்புக் கருத்தரங்கம் தருமபுரி, மார்ச் 27- தருமபுரியில் உலக நாடக தினத்தை முன்னிட்டு நடை பெற்ற சிறப்புக் கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். தருமபுரி மாவட்டம், பைசுஹள்ளியில், பெரியார் பல்க லைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கி லத்துறையின் சார்பில், உலக நாடக தினத்தை முன்னிட்டு  சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் நந்த குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ‘நாடகத் தின் பரிணாம வளர்ச்சி: வரலாற்றின் ஊடே ஒரு பயணம்’  என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இவர் தனது உரை யில், நாடகத்தின் ஆதிகால தோற்றத்தை பற்றியும், தற்கால  வளர்ச்சியை பற்றியும், நாடகங்கள் இலக்கியத்தில் ஏற்படுத்தி யுள்ள தாக்கங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். முன்னதாக மாணவி ஷைனி, இந்நாள் கொண்டாடப்படுவதற்கான கார ணத்தை பற்றியும், தமிழ் இலக்கியத்தின் நாடக தோற்றம்  பற்றி மாணவி காவியாவும் பேசினர். இந்நிகழ்வில் ஆராய்ச்சி  மைய இயக்குனர் (பொ) மோகனசுந்தரம் தலைமை உரை யாற்றினார். தொடர்ந்து நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் கோவிந் தராஜ் துவக்க உரையாற்றினார். உதவி பேராசிரியை கிருத்திகா வாழ்த்துரையாற்றினர். இந்நிகழ்வில் கல்லூரி  மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கட்டணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்

கட்டணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம் உதகை, மார்ச் 27- உதகை அருகே, பெம்பட்டி, பேலிதளா கிராமங்களில் நில வும் குடிநீர் பஞ்சத்தால் அதிக கட்டணம் கொடுத்து தண்ணீர்  வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீலகிரியில், நீர்நிலை, சுற்றுசூழல், மண் வளத்தை பாது காக்கும் நோக்கில் கடந்த, 2018 ஆம் ஆண்டு இயற்கை  விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வா கத்தின் உத்தரவுப்படி, அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் தோட்டக்கலை துறை முன்னிலையில் இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில், 30 சதவீதம் பேர் இயற்கை விவ சாயம் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, தோட்டக் கலை துறையினர் இயற்கை விவசாயம் குறித்து விவ சாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருகிறது. நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் மாறுப்பட்ட காலநிலையால் குறிப்பிட்ட கால கட்டத்தில் பருவமழை பெய்யாமல் காலம் தவறி பெய்வதால் மலை காய்கறி, தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டு நஷ்டமடையும் நிலை  ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு, சதுப்பு  நிலம் பாதுகாப்புக்கு போதிய அக்கறை செலுத்தாமல் விட்டு  விடுவதால் பருவ மழை சமயத்தில் நீர் ஆதாரங்களில் சேகரமாகும் தண்ணீர் சில நாட்களில் வற்றி விடுகிறது. இது தவிர, தண்ணீர் தேவைக்காக உள்ளாட்சி துறை அதிகாரி களின் ஆதரவுடன் ‘போர்வெல்’ அமைக்கின்றனர். நீரோடை  தண்ணீர் மறிக்கப்பட்டு, விளை நிலங்கள், தனியார் காட்டேஜ் களுக்கு திருப்பி விடுகின்றனர். இது போன்ற காரணங்க ளால் ஆண்டாண்டு காலம் பயன்படுத்தி வந்த குடிநீர் ஆதார  பகுதிகள் காணாமல் போய் விட்டது. இந்நிலை மாவட்டத் தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பஞ்சத்தில் மக்கள்  தவித்து வருகின்றனர். விதி மீறலை தடுக்கும் பணி ஒருபுறம்  நடந்தாலும், மறுப்புறம் விதி மீறல் நடந்து கொண்டே தான்  உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தனி குழு அமைத்து  தனி கவனம் செலுத்த வேண்டும். என, சுற்றுசூழல் அமைப்பி னர் வலியுறுத்தியுள்ளனர். கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் குடிநீருக் காக ஊற்று நீரை தேடி சென்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். கட்ட ணம் கொடுத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நிலைக்கு  தள்ளப்பட்டனர்.

அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

திருப்பூர், மார்ச் 27- அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய மூவரை  போலீசார் கைது செய்தனர். கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டி ருந்த அரசு பேருந்து, பொங்கலூர் சர்வோதய சங்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த  வழியாக வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்து  மீது கல்லை தூக்கி வீசி உள்ளனர். இதில் பேருந்தின் முன்பக்க  கண்ணாடி உடைந்து சேதமானது. இதில் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த என்சன் ராஜா (38) என்பவரும், நடத்துனர் தங்கராஜ் (36) என்ப வரும் காயமடைந்தனர். உடனடியாக இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல் லப்பட்டனர். இது குறித்து இருவரும் அவினாசிபாளையம் காவல்நி லையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர். இதில் பொங்கலூர் தேவனம் பாளையத்தைச் சேர்ந்த அருண் குமார் (27), பொங்கலூ ரைச் சேர்ந்த கதிரேசன் (21), மஞ்சப்பூரைச் சேர்ந்த அசோக் குமார் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது  செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாருக்கு தபால் வாக்கு படிவம்

போலீசாருக்கு தபால் வாக்கு படிவம் ஈரோடு, மார்ச் 27- தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாடா ளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்காக 2,222 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குச்சாவடி பணியில்  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில்  போலீசார் ஆகியோர் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணி மற்றும்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு, தபால் வாக்குச்சீட் டினை பதிவு செய்யும் படிவம் வழங்கும் பணி நடைபெற்று  வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் மற்றும் பிற மாவட்டத்தில் வாக்கு உரிமை உடைய போலீஸ்  அதிகாரிகளுக்கு தேர்தல் பிரிவு சார்பில் தபால் வாக்குப்பதிவு  செய்யும் படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இதேபோல், ஆசிரியர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கும் அத்துறைகளின் சார்பில் தபால் வாக்குச்சீட்டு படிவம் வழங் கப்படவுள்ளது.  இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு  மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும்  பிற மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அவர்களது  வாக்கினை பதிவு செய்யும் வகையில் தபால் வாக்குப்பதிவு  படிவம் வழங்கும் பணி நடந்து வருகிறது.  இந்த படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், இவர்க ளின் வாக்காளர் அடையாள அட்டையை அடிப்படையாக கொண்டு தேர்தல் ஆணையத்தின் மூலம் அங்கு போட்டியிடும்  வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்ப ரினை அந்தந்த தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவ லர் வழங்குவார். தொடர்ந்து, அதில் அவர்களது வாக்கினை  பதிவு செய்து, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு  அனுப்பி வைப்பார்கள். இதேபோல், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக  தபால் வாக்கு செலுத்த, பெட்டி வைக்கப்படும். அதில், அவர் கள் அளிக்கும் வாக்கினை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான்று எண்ணப்படும் என்றார்.

மக்கள் விரோத பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவோம்

அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆவேசம்

திருப்பூர்,மார்ச் 27- திமுக அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிற அதே நேரத்தில், மக்கள் விரோத பாஜக அரசை அம்பலப்படுத்தி விரட்டி அடிப்போம் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசி னார். ஈரோடு மக்களவைத் தொகு திக்கு உள்பட்ட காங்கேயம் சட்டப்  பேரவைத் தொகுதிக்கான செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பணிமனை  திறப்பு விழா நடைபெற்றது. காங்கே யம் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை  அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட  திமுக செயலாளர் இல.பத்மநா பன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். இதில், தமிழ் வளர்ச்சி மற்றும்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தேர்தல் பணிம னையை திறந்து வைத்து ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை அறி முகம் செய்து வைத்து உரையாற் றினார். அப்போது அவர் பேசுகை யில், வரும் மக்களவைத் தேர்தலில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். நமது வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அய ராது பாடுபட வேண்டும். தமிழக அர சின் சாதனைகளை வீடு வீடாக எடுத்துச் சென்று, மக்கள் விரோத பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.  இதனைத்தொடர்ந்து, தாராபு ரத்திலும் தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் திருப் பூர் வடக்கு மாவட்டத் தலைவர் கோபிநாத் பழனியப்பன், காங்கே யம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இந்தியா கூட்டணி கட்சி யின் தலைவர்கள் மற்றும் வாக் குச்சாவடி ஒருங்கிணைப்பாளர் கள், வாக்குச்சாவடி நிலை முகவர் கள் என திரளானோர் பங்கேற்ற னர்.

]திருப்பூரில் சரியான நாள், நேரத்திற்கு  குடிநீர் விநியோகிக்க ஆணையாளர் உத்தரவு

திருப்பூர், மார்ச் 27 - திருப்பூர் அருகே உள்ள மேல்நிலை தொட்டிகளில் குடிநீர் இருப்பு குறித்து, மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் அவிநாசி சாலை, பங்களா  ஸ்டாப், குமார் நகர் மற்றும் என்.ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் குடிநீர் இருப்பு குறித்து,  மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்  ஜி.கிரியப்பனவர் செவ்வாயன்று ஆய்வு செய்தார்.  அப்போது, மாநகராட்சி குடிநீர்  திறப்பாளர்களிடம், 100 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து திருப்பூருக்கு தண்ணீர் கொண்டு வந்திருக்கிறோம். போதிய இருப்பு உள்ளது. அதனை கவ னமாக கையாண்டு பொதுமக்களுக்கு விநியோகிப்பது உங்கள் கடமை. அதில் எந்த குறையும் இருக்கக் கூடாது.  இன்னும் 2 மாதம் கோடை வெயில்  காலம் இருக்கும், குடிநீர் பற்றாக்குறை  ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான நாள், நேரத்திற்கு குடிநீர் விநியோகிக்க வேண்டும். குடிநீர் விநியோகிக்கப்பட்ட பகுதி பொதுமக்களிடம், எவ்வளவு மணி நேரம், குடிநீர் விநியோகிக்க பட்டது என கையெழுத்து பெற்று வரும்படி ஆணையிட்டார்.

பிஏபி முதலாம் மண்டல பாசனம் 2ஆம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு

பிஏபி முதலாம் மண்டல பாசனம் 2ஆம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு உடுமலை, மார்ச் 27- பிஏபி பாசனத்திட்டத்தின் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில், சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்களுக்கு நான்கு  மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், திருப்பூர் தாலுகா மற்றும் கோவை மாவட்டம் பல்லடம், சூலூர் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 521 ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் முதலாம் மண்டலத் திற்கு கடந்த பிப் 12 ஆம் தேதி முதலாம் சுற்றுக்கு தண்ணீர்  திறக்கப்பட்டது. வரும், மே மாதம் 22 ஆம் தேதி வரை 100 நாட்களுக்கு  குறிப்பிட்ட இடைவெளியில், இரண்டரை சுற்றுக்களில் 5 ஆயி ரம் மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படும் என அறி விக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருமூர்த்தி அணையிலிருந்து, முதலாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்றுக்கு, நீர் வழங்கப்பட்டது. இதனிடையே, பிஏபி திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர்  கொண்டு வரப்பட்டு, இருப்பு வைக்கும் பணியும் நடை பெற்றது. அந்த வகையில், திருமூர்த்தி அணையில் செவ்வா யன்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 56.50 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 770 கன அடியாக  இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 35 கன அடியாக  இருந்தது. இந்நிலையில், முதலாம் மண்டலம் இரண்டாம் சுற்றுக்கு  நீர் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாத காரணத்தாலும், திட்ட தொகுப்பு  அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாத காரணத் தாலும், முதலாம் மண்டல பாசனத்தில் இரண்டாம் சுற்றுக்கு  25 நாட்கள் வரை மட்டுமே நீர் வழங்கும் சூழல் உள்ளதாக  தெரிவித்தனர்.

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டை பாக்குக்கு விலை சொல்கிறார்!

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற் றல் ஆசோக்குமார் இரண்டாவது முறை யாக கூடுதல் வேட்பு மனுவினை தாக் கல் செய்தார். அப்போது செய்தியாளர் களிடம் பேசினார். அப்போது, 600 கோடி ரூபாய் சொத்து குறித்த கேள்விக்கு, சாதாரண, நடுத்தர குடும்பமாகத்தான் இருந்தோம். படிப்பு, கடின உழைப்பு, இறைவன் அருள் மற்றும் சமுதாயம் அளித்த கொடை தான் இந்த அளவு பொருளாதார நிலைக்கு வர முடிந்தது என்றார். மேலும், தாங்கள் வாக்காளர்க ளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டதே என்ற கேள்விக்கு, அது என்னுடைய அறக்கட்டளையின் மூலமாக வழங்கவி ருந்த சேலைகள், தேர்தல் விதிமுறைகள் அமலானதால் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதனை பறக்கும் படை பிடித்துள்ளது. அரசு உரிமைத் தொகை வழங்குவதை விளம்பரப்படுத் துவது போல நாங்கள் சாப்பாடு போடு வதை விளம்பரப்படுத்துகிறோம் என ஒரு போடு போட்டார். பின்னர், ஆற்றல் பவுண் டேசன் மூலம் எத்தனை கோடி செலவு செய்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, பல  கோடிகள் இருக்கிறது என்றும், தங்களை கார்ப்பரேட் அரசியல்வாதி என்கிறார் களே என கேள்வி எழுப்ப, திராவிட மாட லுக்கு அர்த்தம் சொன்னால் நான் கார்ப்ப ரேட்டுக்கு அர்த்தம் சொல்கிறேன் என சமாளித்து ஓட்டம் எடுத்தார்.