districts

img

வங்கி ஊழியர்கள் தர்ணா

தருமபுரி, ஆக.28- மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு கூட் டுறவு வங்கி உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுததி தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவிகித ஊதிய உயர்வு வழங்க வேண் டும். மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை இணைத்து “தமிழ் நாடு கூட்டுறவு வங்கி” என்று உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு தலைமை செயலா ளர் வெளியிட்ட ஆணைப்படி, கூட்டுறவு வங்கி ஊழியர்க ளுக்கு முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மே ளனம் தலைமையில், தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி ஊழி யர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வங்கி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.கஜேந்திரன் தலைமை வகித்தார். இதில், மாநில துணைத்தலைவர் எஸ்.அறிவழகன், மகளிர் அணி ஒருங்கி ணைப்பாளர் ஆர்.கரோலின்ராஜ், மாவட்ட பொதுச்செயலா ளர் ஜி.சாமிக்கண்ணு, பொருளாளர் எம்.வடிவேல் உட்பட திர ளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.