அவிநாசி, ஜூலை 20 - வங்கிகளை காப்போம், தேசத்தை காப் போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந் திய வங்கி ஊழியர் சம்மேளனத்தினரின் (பெஃபி) பிரச்சாரப் பயண இயக்கம் வியாழ னன்று திருப்பூர் மாவட்டத்தில் நடை பெற்றது. பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகளை பாதுகாப்போம் என்ற முழக்கத் தோடு தமிழ்நாட்டின் 4 முனைகளில் இருந்தும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் பிரச்சார பயண இயக்கத்தைத் தொடங்கியுள் ளனர். கோவையில் இருந்து பிரச்சார இயக் கத் தலைவர் என்.சுப்பிரமணியன் தலைமை யில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ. ராஜேந்திரன், கோவை மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் மகேஷ்வரன், சிவ லிங்கம், நாகேந்திர ராஜா மற்றும் நிர்வாகி கள் அடங்கிய குழுவினர் திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு வருகை தந்தனர். அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பிரச்சார பயணத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் செயலாளர் என். சுப்பிரமணி பேசினார். அவிநாசியில் இந்தப் பிரச்சாரப் பயணக் குழுவை வரவேற்று சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.முத்துசாமி, சிஐடியு அவிநாசி பொதுத்தொழிலாளர் சங்க ஒன்றி யச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, விவசாய சங்க நிர்வாகி வெங்கடாசலம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்மு கம், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.ராஜன், ஒன்றிய நிர்வாகிகள் கனகராஜ், வேலுச்சாமி, பழனிச்சாமி, விசைத் தறி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பழ னிச்சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு உறுப்பினர் முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கிருந்து வேலம்பாளையம் நகரம், திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். இதை அடுத்து தாராபுரம் அண்ணா சிலை முன்பு பிரச்சாரத்தில் ஈடு பட்டு காங்கேயம் சென்றனர். முன்னதாக சிஐ டியு, இன்சுரன்ஸ், அரசு ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில் பயணக்குழுவின ருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் பொதுத்துறை, கூட்டு றவு, கிராம வங்கிகளை தனியார் மயமாக் கும் ஒன்றிய அரசின் முடிவு கடும்பாதிப்பு ஏற் படுத்தும். இதனால் சாதாரண மக்களுக்கான சேவை பின்னுக்கு தள்ளப்படும். வைப்பு தொகைக்கும் பாதுகாப்பு இருக்காது. சேவை கட்டணங்கள் உயரும். சாமானிய மக்க ளுக்கான முன்னுரிமை கடன் முழுவதும் கைவிடப்படும். விவசாயம், சிறுதொழில், கல்வி ஏழை நடுத்தர மக்களுக்கான கடன்கள் மறுக்கப்படும். உயர்மட்ட ஊழல் தீவிரமடை யும். வங்கி பணியாளர் தேர்வில் வெளிப்ப டைத்தன்மை இருக்காது. எனவே ஒன்றிய அரசு தனியார்மயம் முடிவை கைவிட வேண் டும் என வலியுறுத்தப்பட்டது. அரசு வங்கி என்றால் நமது வீட்டுக்குள் நுழைவது போல், தனியார் வங்கி மற்றும் வெளிநாட்டு வங்கிகள் வந்துவிட்டன, இந்த வங்கிகளில் நுழையும் போது வேஷ்டி சட்டை அணிந்து பாமரன் போல் சென்றால் மரி யாதை இருக்காது. முதியோர் பென்சன் கொடுப்பது, தனியார் வங்கியில் வங்கி கணக்கு துவங்க முடியாது, தேசியமய வங்கி யில் வாடிக்கையாளரை தேடி சேவை செய் கிறார்கள். தனியார் வங்கியில் இதுபோன்ற சேவைகள் நடைபெறாது, என்று கூறினர்.