சேலம், டிச.13- மோசடியாளரோடு கைகோர்த்து மலை வாழ் மக்களின் வங்கிக்கணக்கை முடக்கி வைத்த வங்கி மேலாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கரும்புத்துறை தும் பல் இந்தியன் வங்கியிலும், சேலம் ஈஷா வங்கியிலும் கடன் வாங்கி கொடுப்பதாக சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி நடை பெற்றுள்ளது. இந்த மோசடியை அபினவம் ஜெயராமன் என்பவர் மேற்கொண்டுள்ளார். இவரை உடனடியாக கைது செய்ய வேண் டும். வங்கி மேலாளர்களுக்கும் பொதுமக்க ளுக்கும் இடைத்தரகராக செயல்பட்டு அபி னவம் ஜெயராமனுக்கு துணை போகும் தும்மல் இந்தியன் வங்கி மேலாளர், கருமந் துறை இந்தியன் வங்கி மேலாளர், சேலம் ஈசா வங்கி மேலாளர்கள் மீது குற்றவியல் சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண் டும். கடன் தொகையை முழுமையாக கட்டி முடித்த பின்பும், மலைவாழ் மக்கள்் மற்றும் பொதுமக்களின் வங்கி கணக்கு முடக்கப் பட்டுள்ளது. அதனை உடனடியாக நீக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கருமந்துறை இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, சிபிஎம் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி, மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.