கோவை, டிச.28- கோவை வாலங்குளத்தில் புத் தாண்டு கொண்டாட்டங்களால் ஏற்படும் சூழலியல் மாற்றம் குறித்து தீக்கதிர் நாளிதழில் சூழலியல் வல்லுனர்களின் கருத்துக்களுடன் செய்தி தொகுப்பு வியாழனன்று வெளியானது. இதன் எதி ரொலியாக வாலாங் குளத்தில் புத் தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க ஓசை என்ற தன்னார்வ அமைப்பு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பினர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதா வது, எதிர்வரும் புத்தாண்டை ஒட்டி டிசம்பர் 31 ஆம் தேதி இரவு கோவை வாலாங்குளத்தில் பெரும் கொண் டாட்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்ட மிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந் துள்ளன. அதில் 300 ட்ரோன்கள் பறக்க விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. 20,000 எல்.இ.டி விளக்குகளு டன் ஒலி ஒளி காட்சிகளும் நடத்தப் பட உள்ளதாக விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. குளம் என்பது நீர்வாழ் உயிரினங்க ளின் வாழ்விடம் என்பதை அறிவீர்கள். குறிப்பாகப் பறவைகளின் இருப்பிடம் பல்வேறு இடையூறுகள் இருந்தாலும் நமது வாலாங்குளம் பல அரிய பறவை களின் வாழ்விடமாக விளங்குகிறது. சுமார் நூறு வகையான பறவைகள் பயன்படுத்துவதாக பறவை ஆய்வா ளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆவணப் படுத்தியுள்ளனர். மேலும் இங்கு உப்பு கொத்தி, நீலவால் பஞ்சுருட்டான் உள் ளிட்ட பறவைகள் தொலைதூர நாடு களில் இருந்து குறிப்பிட்ட காலங்களில் இங்கு வலசை வருகின்றன. அவ்வகை யில் எண்ணிறந்த வகை பறவைகள் வலசை வரும் காலம் அது. உலகளவில் 49 விழுக்காடு பறவை வகைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றில் ஆழமான பகுதியிலும் கரை களிலும் வாழும் பறவைகள், வலசைப் பறவைகள், வேட்டையாடும் பறவை கள் பெருமளவு குறைந்து வருவதாக அறியப்படுகிறது. இவ்வகை பறவை களில் பலவும் வலாங்குளத்தை வாழ் விடமாகக் கொண்டுள்ளன. குளக்கரை யில் உள்ள மரங்கள் பலவிதமான பற வைகளுக்கு இரவு நேர இருப்பிடமாக விளங்குகின்றன. இந்தச் சூழலில் ட்ரோன் பறக்க விடுவதும், காதை கிளிக்கும் ஒலி கண்ணை பறிக்கும் ஒளியை எழுப்புவதும் பறவைகள் என்ற எளிய உயிர்களை துன்புறுத்தும் செய லாகும். எனவே புத்தாண்டு கொண்டாட் டம் என்கிற பெயரில் நடத்தப்பட உள்ள மேற்கண்ட செயல்களை வாலாங்குளத் தில் அனுமதிக்காமல் தடை விதிக்க வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.