districts

img

தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரால் துர்நாற்றம் - மக்கள் அவதி

கோபி, பிப்.28- கோபிச்செட்டிபாளையம், தாமுநகரில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் நகராட்சிக்குட்பட்பட்ட 1ஆவது வார்டு  தாமுநகரில் 30க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், வீடுகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்ல, முறையான வடிகால் வசதி இல்லாததால், வீடுகளின் வெளிப்பு றத்தில் கழிவுநீரை தேக்கி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுகாதார  சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள் ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித் தால், 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரை, வாக னம் மூலம் அகற்றுகின்றனர். இதில், கழிவு நீரை முழுமையாக அகற்றாமால் ஒருசில இடங்களில் மட்டும் அகற்றிவிட்டு சென்று விடுவதாகவும் புகார்கள் எழுகின்றன. இதனால், முழுமையான தீர்வாக சாக் கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டி நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனுக்கள் அளித்தும், இதுவரை  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.இதுகுறித்து, நகராட்சி அதிகாரிக ளிடம் கேட்டால், நிதி இல்லை என்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.