திருப்பூர், ஜூலை 9 - திருப்பூர் கொங்குமெ யின் ரோடு கொடிக்கம்பம் பகுதியில் இருந்து திருப்பூர் அரசு மருத்துவமனை செல் லும் வழியிலேயே 108 அவசர ஊர்தியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. கொடிக்கம்பம் பகுதி யைச் சேர்ந்த தம்பதி யேசு தாஸ், சித்ரா. சித்ராவுக்கு பிர சவ வலி வந்த நிலையில் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவசர ஊர்தி அங்கு வந்து சித் ராவை அழைத்துக் கொண்டு திருப்பூர் அரசு மருத்துவ மனை நோக்கிச் சென்றது. அப்போது வழியிலேயே அவசர ஊர்தியில் சித்ரா வுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 108 அவரச ஊர்தி மருத் துவ உதவியாளர் ஈஸ் வரி உடனிருந்து தேவை யான மருத்துவ உதவி கள் செய்தார். ஓட்டுநர் வெங்கடேஷ் பாதுகாப் பிற்கு இருந்தார். தாய், சேய் இருவரும் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டனர்.