கோவை. மே 8- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் மீண்டும் பாகுபலி யானையின் நடமாட்டம் துவங்கி உள்ளது. வழக்கமான பாதை மறிக்கப்பட்டதால் குழப்பமடைந்த யானை, மாற்று வழி தேடி சாலை வழியே நடந்து சென்றது. கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது ஊருக்குள் உலா வரும் ஒற்றை ஆண் காட்டு யானையான பாகுபலியை இப்பகுதியில் தெரியாதவர்களே இல்லை என லாம். தொடர்ச்சியாக சில மாதங்கள் தினசரி மாலை நேரங்க ளில் காட்டை விட்டு வெளியேறி, ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை உண்பது, பின்னர் பவானியாற்றில் நீர் அருந்துவது, விடியற்காலையில் அருகில் உள்ள காட்டு பகு திக்கு செல்வது என்பதை வாடிக்கையாக செய்து வருகிறது. திடீரென சில மாதங்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விடும் இந்த யானை, சுமார் மூன்று மாத இடை வெளியில் மீண்டும் ஊருக்குள் உலா வரத் துவங்கி உள்ளது. இந்த யானை மனிதர்களை தாக்க முற்படுவது இல்லை. மனிதர்கள் விரட்ட முயன்றாலும் பயப்படுவது இல்லை. கடந்த இரு மாதங்களாக சமயபுரம், ஓடந்துறை, தாசம்பா ளையம், நெல்லித்துறை பகுதிகளில் நடமாட துவங்கியுள்ள பாகுபலி, புதனன்று பவானி ஆற்றில் நீர் அருந்த வழக்கம் போல் சமயபுரம் என்னுமிடத்தில் வீடுகள் உள்ள குடியி ருப்பு தெரு வழியே நடந்து சென்றது. நெல்லிமலை காட்டில் இருந்து பாகுபலி வெளியேறினால் ஆற்றுக்கு செல்ல எப்போ துமே இவ்வழியை தான் பயன்படுத்தும். ஆனால், அங்கி ருந்த காலியிடம் தோட்டமாக மாற்றப்பட்டு வேலி அமைக்கப் பட்டதை கண்டு யானை குழம்பி போனது. தோட்டத்தில் இருந்தவர்கள் டார்ச் லைட் அடித்து விரட் டவே, நாம் தான் பாதை மாறி வந்து விட்டோமோ என அங்கிருந்து மெல்ல திரும்பியது. தொடர்ந்து, வேறு வழி யின்றி வந்த வழியே திரும்பி சாலைக்கு வந்தது. இதன் பின்னர் மாற்று வழி தேடி ஒய்யாரமாக சாலை வழியே நடந்து சென்றது. பாகுபலி யானையின் நடமாட்டத்தை வனத்துறையி னர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.