கோவை, செப்.2- பவானியாற்றில் நீர் அருந்தி விட்டு குடியிருப்பு பகுதியில் உலா வந்த பாகு பலி யானையால், மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் பதுங்கி கொண்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதி யில் கடந்த மூன்றாண்டு களுக்கும் மேலாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. இந்த யானை இரவானால் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வர துவங்கு வதோடு வழியில் கிடைக்கும் விவசாய பயிர் களை உண்டு விட்டு தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு செல்வது வாடிக்கையாகி விட்டது. ஆனால் இந்த யானை எந்த நேரத்தில் எந்த இடத்தை கடக்கும் என கணிக்க முடிய வில்லை. மேலும், இதன் நடமாட்டத்தை அடிக்கடி மாற்றி கொள்ளுவதால் வனத் துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று இரவு காட்டை விட்டு வெளியேறிய பாகுபலி பவானி ஆற்றுக்கு சென்று விட்டு, சனியன்று காலை அருகில் உள்ள சமயபுரம் குடி யிருப்பு பகுதியில் உள்ள குறுகிய சந்திற்குள் நுழைந்து கடந்து செல்ல துவங்கியது. இதை யறிந்த அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் புகுந்து கதவை தாழிட்டு கொண்டனர். வீதி வழியே நடந்து சென்ற பாகு பலி பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து பத்திரகாளியம்மன் செல்லும் சாலையை கடந்து நெல்லிமலை வனப்பகுதிக்குள் சென்றது.