பிளாஸ்டிக் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைத்து சாலையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி மறுசுழற்சிக்கு அனுப்பும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.வில்லிவாக்கம் பகுதியில் தொடங்கிய பிளாஸ்டிக் நடைபயணம் 25 கி.மீ தூரம் கடந்து பெசன்ட் நகர் கடற்கரையில் நிறைவடைந்தது. இதில் பேசிய பிளாஸ்டிக் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கவுதம், பிளாஸ்டிக் விவகாரத்தில் பொதுமக்களும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.