districts

மாணவர்களுக்கு வானியல் துறை குறித்து விழிப்புணர்வு

சேலம் , ஏப் 24 - சேலம் ஆஸ்ட்ரோ கிளப் அமைப்பை சேர்ந்தவர் மேகலா.   அஸ்ட்ரானமி போன்ற பல நிகழ்ச்சி களை நடத்தி  வருகிறார். ஏறக்குறைய  10,000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு வானியல் ஆர்வத் தையும், தகவல்களையும் வழங்கி  வருகிறார். கணித கவுரவ பேராசிரி யர் முதல் ஐ.டி., ஊழியர் வரை பல  தளங்களில் பணியாற்றிய பின்பு, இப்போது இந்த பணியினை செய்து  வருகிறார். மாணவர்கள் தங்கள் எதிர்கால மாக வானியல் துறையை நிறுவிக் கொள்ள ஆர்வமும், உத்வேகமும் கொடுப்பதே தனது நோக்கம் என வும், இதற்காக பல புகழ்பெற்ற வானி யல் மையங்களில் இருந்து அறிவி யலாளர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு கற்பிக்க வைப்ப தாகவும் கூறியுள்ளார். இதன் பல னாக, இப்போது பல மாணவர்கள் தங்கள் கிளப்பில் சேர்ந்து, தாங்களா கவே தனியாக பல ‘சயின்ஸ் அவுட் ரீச்’ நிகழ்வுகளை நடத்துகின்றனர் எனவும் தெரிவித்தார். இங்கு, தமிழ்நாடு வானியல் மற் றும் அறிவியல் கழகம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், விஞ்ஞான் பிரசார், அறிவி யல் பலவகை ஆகியவை வழங்கும்  வானியல் கற்றல் தகவல்கள் மற்றும்  இஸ்ரோ விஞ்ஞானிகள், பல வெளி நாட்டு விஞ்ஞானிகள் தரும் வானி யல் தகவல்களை மாணவர்களுக்கு கதைகள், தமிழ் அறிவியல் பாடல் கள், செயல்பாடுகள் வாயிலாக மிக  எளிய முறையில் எடுத்து செல்லப் பட்டு வருகின்றன. குறிப்பாக ஆரம்ப பள்ளி குழந் தைகளின் கற்பனை வளம் ப்ரெஷ் ஆகவும், தேடுதலுடனும் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும், அது ஏன்? எப்படி? அடுத்து என்ன? என பல கேள்விகள் அவர்களுக்கு விரிந்து கொண்டே போகும். அதற்கு அறிவி யல் பூர்வமாக தீனி போடும் ஒரு துறை  தான், வானியல். இந்த பிரபஞ்சம் எப் படி உருவானது, அதன் விரிவு உள் ளிட்டவற்றை எல்லாம், நாங்கள் கற் றுக்கொடுத்து புரிந்து கொள்வதை விட, தங்கள் கேள்விகளாலும், சந்தே கங்களாலும் இவர்கள் அதிகம் புரிந்து கொள்வர். எந்தளவுக்கு அவர்கள் புரிந்து கொள்கின்றனரோ, அந்தளவுக்கு அவர்களுக்கு வானியல் பார்வை தெளிவடையும். அது தான் எங்கள் நோக்கமும்கூட. நீ என்னவாக போற?’ என்ற கேள்விக்கு, பொது வாக பெரும்பாலும் மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், காவலர்,  ஊடகவியலாளர் என்ற பதில்க ளையே சொல்லும் மாணவர்கள், வானியலாளர் என்று சொல்வது மிக  அரிது. காரணம், அது அவர்களுக்கு காட்டப்படாத பாதை. அந்த பாதையை நம் மாணவர்களுக்கு நாம் காட்டுவோம் என்றார்.