districts

போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க சைக்கிள் மூலம் விழிப்புணர்வு-சாதனை

கோவை, ஜூன் 4- கோவை அருகே போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி சாதாரண சைக்கிளில் 40 கிலோ எடையை சுமந்து கொண்டு 110 கிமீ தூரத்தை 11 மணி நேரத்தில் கடந்து உலக சாதனை நிகழ்த்திய அரசு பேருந்து நடத்துநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்ப்போம் என்ற விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை அறிவழகன் மேற்கொண்டார். ச மேட்டுப்பாளையம் அரசு பேருந்து நிலையத்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் அறிவழகன். இவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பிருந்து சைக்கிள் பயணத்தை சனியன்று காலை 10 மணியளவில் தொடங்கினார். புகலூர், அன்னூர், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, பல்லடம், பொங்கலூர், அவிநாசிபாளையம், கொடுவாய் வழியாக இரவு 9 மணிக்கு தாராபுரம் வந்தடைந்தார். தாராபுரம் வந்தடைந்த கருணாகரனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து நோபல் புக் அப் வேர்ல்ட் ரெக்கார்ட் (noble Book of World records) சாதனைப் புத்தகத்தில் உலக சாதனை படைத்தார். உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை பயிற்சி ஆசிரியர் அரவிந்த் சிவா வழங்கினார்.