districts

img

விழிப்புணர்வு வாகன பேரணி:

திருப்பூர், டிச.11- மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் பதிவு 2023 குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பேரணியை திங் களன்று மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார் பில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு மாவட்ட முழுவ தும் நடைபெற்று வருகிறது.  இது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்தி றனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு 2023 என்ற தலைப்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள் ளிட்டோர் துவக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரை சென்று மீண் டும் பல்லடம் சாலையில் நிறைவடைந்தது.