districts

img

சிறுபான்மை நலக்குழு தலைவருக்கு விருது

ஈரோடு, செப்.30- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவருக்கு ‘மத நல்லிணக்க விருது’ வழங்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக விருது வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு அப் துல் கனி மதரசாவில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலை வர் அஸ்கர் அலி தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரையாற்றி னார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணைத்தலைவர் பி.மாரிமுத்து, மதரசா தாளாளர் இ.கே.எம்.ஜி.முகமது தாஜ் முஹை யதீன், சத்தியமங்கலம் ஜமாஅத் தலைவர் எஸ்.என்.நதிமுல்லாகான் ஆகியோருக்கு மத நல்லிணக்க விருதுகள் வழங்கப்பட்டன. அன்னூர் ஓதிமலை சிவநேச அடிகளார் நல் லிணக்க உரை நிகழ்த்தினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.