அவிநாசி, அக்.28 - அவிநாசியில் சாலையோர வியாபா ரிகள் மற்றும் வணிகர் சங்கம் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை யில் சுமூகமான தீர்வு எடுக்கப்பட்டுள் ளது. அவிநாசியில் சாலையோர வியா பாரிகள் 150க்கும் மேற்பட்டோர் உள்ள னர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை யோர வியாபாரி வழக்கமாக கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த இடத் தில், வணிகர் சங்கத்தை சேர்ந்தவர்க ளின் பின்புலத்தில் சிலர் தக்காளி கடை அமைத்து ரகளையில் ஈடுபட்டனர். அந்த காணொளி சமூக வலைதளங்க ளில் வைரலாக பரவியது. இந்நிலையில், வட்டாட்சியர் மோக னன் தலைமையில் அவிநாசி காவல் துறை ஆய்வாளர் கோவர்த்தனாம் பிகை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, பேரூராட்சி செயல் அலுவலர் இந்து மதி ஆகியோர் சிஐடியு, ஏஐடியுசி சாலை யோர வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்து நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இப்பேச்சுவார்த்தையில் சாலை யோர வியாபாரிகள் ஒரு கட்டில் அமைத் தும், கடைகளுக்கும், போக்குவரத்துக் கும் இடையூறு இல்லாமல் சாலை யோர வியாபாரத்தை செய்து கொள்ள லாம் என முடிவு செய்யப்பட்டது. அதேபோல ஞாயிறன்று எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் வியாபாரம் செய்வது தொடர்பாக அரசு அதிகாரி கள், காவல்துறையினர் ஆய்வு மேற் கொள்வதாகவும் தெரிவித்தனர். இதில் சிஐடியு பொதுத் தொழிலா ளர் சங்கத்தின் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, ராஜன், நிர்வாகிகள் வேலுச் சாமி, பழனிச்சாமி மற்றும் மாதப்பன், ஏஐடியுசி சங்கம் சார்பில் நாசர் உட் பட பலர் கலந்து கொண்டனர்.