districts

img

எல்ஐசி முகவர் சங்கத்தின் அவிநாசி கிளை ஆண்டுப் பேரவை

அவிநாசி, ஆக.19 – அகில இந்திய எல்ஐசி முக வர்கள் சங்கம் (லிகாய்) அவி நாசி கிளை ஆண்டுப் பேரவை  வியாழக்கிழமை நடைபெற் றது. அவிநாசியில் உள்ள தனி யார் விடுதியில் நடைபெற்ற அகில இந்திய எல்ஐசி முக வர்கள் சங்க ஆறாம் ஆண்டு அவிநாசி கிளை பேரவைக்கு சி.பழனிச்சாமி தலைமை ஏற் றார். செயலாளர் பி.கோதண்டம் வரவேற் றார். முன்னதாக கோவை கோட்டத் தலைவர்  எஸ்.கே.பிரேம்குமார் கொடியேற்றினார். கோவை கோட்டச் செயலாளர் எஸ்.கோவர் தனன், மாநில கல்விக்குழு கன்வீனர் பா. ராஜேஷ், மாநிலச் செயலாளர் பி.குமார், சி.ஐ. டி.யு மாநிலக்குழு உறுப்பினர் பி. முத்துசாமி,  மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில் முகவர்களுக்கு மருத்துவக் காப் பீடு வழங்க வேண்டும், பாலீசி பிரீமியம்  தொகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிட  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதையடுத்து நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அவிநாசி கிளை தலை வர் சி. பழனிச்சாமி, செயலாளர் ஆர். கோதண் டம், பொருளாளர் சி.சுப்ரமணியம், துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.மகேஷ், டி.ஆர்.சம் பத், துணைச்செயலாளர் விஜயலட்சுமி, பார் வதி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இப்பேரவையில் வணிக பயிலரங்கம் விதியை மதியால் வெல்லலாம் என்ற தலைப் பில் மதியழகன் உரையாற்றினார்.