ஹரியானா மாநிலத்தில் போராடி வரும் ஆஷா ஊழியர்களுக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்லம்மாள், துணைத்தலை வர்கள் வெண்ணிலா, ராமத்தாள், மாநில நிர்வாகி எம்.பாக்கியம், சாலையோர வியா பாரிகள் சங்க நிர்வாகி பி.பாலன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.