districts

img

30 கிலோ மீட்டர் தூரம் வரை அழைத்து செல்ல அனுமதித்திடுக

உதகை, மார்ச். 7- சுற்றுலாப் பயணிகளை 30 கிலோ  மீட்டர் தூரம் வரையில் அழைத்து  செல்ல அனுமதிக்க வேண்டும் என  வலியுறுத்தி ஊட்டியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  நீலகிரி மாவட்டத்தில் விவசா யத்துக்கு அடுத்ததாக சுற்றுலாத்  தொழில் உள்ளது. சுற்றுலாப் பயணி களை சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்து செல்வதில் வாடகை கார்  ஓட்டுநர்களுக்கும், ஆட்டோ ஓட்டு நர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு வந்தது.  இதனையடுத்து, நகரப் பகுதி யில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத் துக்குள் மட்டுமே ஆட்டோவை இயக்க வேண்டும் என மாவட்ட நிர் வாகம் உத்தரவிட்டிருந்தது.  மேலும், நிர்ணயித்த தூரத்தை  கடந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கள் அபராதம் விதித்து வருகின்ற னர். இது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தி யில் ஒரு கொந்தளிப்பான நிலை  ஏற்படுத்தியது. இதனைத்தொ டர்ந்து, நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலாப் பயணி களை அழைத்து செல்ல ஆட்டோக் களுக்கு அனுமதிக்க வேண்டும் என  கடந்த 26 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.  இதனையடுத்து, பிரச்சி னைக்கு சிறந்த தீர்வு காணப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், தற் போது வரையில் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலை யில், காலவரையற்ற தொடர்  வேலை நிறுத்த போராட்டத்தை  ஆட்டோ ஓட்டுநர்கள் துவங்கியுள் ளனர். இதன்தொடர்ச்சியாக, உதகை ஏடிசி பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள்  ஆர்ப்பாட்டத்திலும் ஈடு பட்டனர்.  இதுகுறித்து நீலகிரி மாவட்ட  ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலை வர் சண்முகம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர் மற் றும் கோத்தகிரி ஆகிய பகுதிக ளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஆட்டோக்கள் இயங்கி வருகின் றன. 15 கிலோ மீட்டர் தூரத்துக் குள் மட்டுமே ஆட்டோக்கள் இயக்க  வேண்டும் என்ற உத்தரவு உள் ளது. ஊட்டி நகரில் மட்டுமே 2500 ஆட்டோக்கள் உள்ளன. ஆனால் இந்த ஆட்டோக்கள் நகரின் எல் லையான 5 கிலோ மீட்டர் தூரத் திற்குள்ளேயே இயக்கப்பட வேண் டிய நிலை உள்ளது. எனவே தொலை தூரங்களுக்குள் ஆட் டோக்கள் சென்று வந்தால் மட் டுமே பிழைப்பு நடத்த முடியும். அரசு  இப்பிரச்சனைக்கு தீர்வு காணும்  வரையில் தொடர் வேலை நிறுத்த  போராட்டத்தை துவங்கியுள்ளோம் என்றார்.