districts

img

ஆட்டோ ஓட்டுநர்கள் தான் ஒரு மாநிலத்தின் முகம்

ஈரோடு, அக்.1- ஒரு மாநிலத்தின் முகமாக இருப் பது ஆட்டோ ஓட்டுநர்கள் தான் என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு தெரிவித் தார். ஈரோடு மாநகரில் உள்ள ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு பழையபாளையத் தில் உள்ள சத்தி துரைசாமி திருமண மண்டபத்தில் சக்தி தேவி அறக்கட்ட ளையின் சார்பில் அமைப்பு சாரா நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன் கரா தலைமை வகித்தார். சக்தி தேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி, மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர் முரு கேசன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். தமிழ்நாடு அரசின் முன்னாள்  தலைமை செயலாளர் வெ.இறையன்பு  பங்கேற்று, 150 ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கு அமைப்பு சாரா நலவாரிய உறுப் பினர் அட்டை மற்றும் 2 செட் சீருடை களை வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில், ஒரு மாநிலத்தின் முகமாக இருப்பது ஆட்டோ ஓட்டுநர்கள் தான். ஒருவர் தொடர் வண்டி(ரயில்) நிலையத் திலோ, விமான நிலையத்திலோ இறங் கினால், அவர்கள் முதலில் சந்திப்பது ஆட்டோ ஓட்டுநர்களை தான். எனவே, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர் களோ, அதை வைத்து தான் அந்த மாநி லத்தின் பிம்பம் அவர்களுக்கு ஏற்படும். இதன்பேரில், சென்னையில் சுற்றுலா  நட்பு வாகனம் திட்டத்தை துவக்கி னோம். இதேபோல், பல்வேறு மாவட் டங்களிலும் சுற்றுலா நட்பு வாகனங்கள் பெருகியது. இந்த வாகனங்கள் நம்ப கத்தன்மை வாய்ந்ததாக இருந்தது. அவர்களை நலவாரியத்தில் இணைக்க முயற்சி செய்து, இணைத்தோம். அந்த  அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா நட்பு வாகனங்கள் துவக்கி, நலவாரியத்தில் இணைக்க கோரி வலி யுறுத்தினேன். இதன்பேரில், ஒரு வாரத் தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள் ளது, என்றார். இந்நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநர் கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட  பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை சக்திதேவி அறக் கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.