districts

img

அரசுப் பள்ளியை ஆக்கிரமித்த நபர்கள் நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

தஞ்சாவூர், ஆக.21- கிராம மக்கள், பள்ளி வளர்ச்சிக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு, அன்னையர் குழு, இளைஞர் மன்றம் சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலை வர் பெ.முத்துச்சாமி, தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்த ராவுக்கு மனு அனுப்பி உள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) கடந்த 80 ஆண்டு களாக இயங்கி வருகிறது. தற்போது நீண்ட போராட் டங்களுக்குப் பிறகு, தேசிய ஊரக திட்டத்தின் மூலம், ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 210 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்க ஆட்சியர் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட நிலையில் தற்போது 100 மீட்டர் அளவிற்கு மட்டுமே சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 

2016-ல் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பில், புதிய கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இடத்தின் அருகே பள்ளிக்குச் சொந்தமான இடத்திற்கு, மேற்கு பகுதியில் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர், பள்ளிக்கு சொந்தமான சுமார் 10 சென்ட் இடத்தில் ஒரு ஓட்டு வீட்டையும் கொட்டையையும் அமைத்துள்ளார். அந்த இடம் தொடக்கத்தில் குழந்தைகள் நல மையமாகவும், ஆசிரியர் குடியிருப்பும் இருந்த இட மாகும். தற்போது அங்கன்வாடி சுவர் பழுத டைந்துள்ளது.  இதே போல் ஒருவர் கொட்டகை அமைத்தும், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் பள்ளி இடத்தில் குடிநீர் குழாய் பதித்து தென்னந்தோப்பிற்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார். கிழக்குப் பகுதியும் ஒருவரால் ஆக்கி ரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்று வது தொடர்பாக, பலமுறை பள்ளி நிர்வாகம் நேரடி யாகவும், மனுக்கள் மூலமாகவும் பிரச்சினைகளை தெரிவித்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சிப் பிரமுகர் தலையீட்டால் அலுவலர்கள் முறையாக செயல்பட தயங்குகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் ஆக்கிர மிப்பை அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.