districts

img

இடத்துக்கு ஏற்ப வடிவத்தை மாற்றி உயிரோடு இருக்கிறது சாதி!

திருப்பூர், பிப்.18- ‘அமெரிக்காவில் சாதி’ என்ற நூல் வெளியீட்டு விழா அவிநாசி யில் நடைபெற்றது. இதில், சாதி இடத்துக்குத் தக்க வடிவத்தை மாற்றி உயிரோடு இருக்கிறது, என்று நூலாசிரியர் அருள்மொழி கூறினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி கோவம்ச திருமண மண்டபத்தில் ஞாயிறன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் சார்பில், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் தலை மையில் ‘அமெரிக்காவில் சாதி’ நூல் வெளியீட்டு விழா நடைபெற் றது. க.மு.ஆயிஷா வரவேற்றார். எழுத்தாளர் அருள்மொழி எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்திருக் கும் இந்நூலை திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வெ.குமார ராசா வெளியிட்டார். அமெரிக்காவுக்கு போனால் வசதி யாக வாழலாம் என்று இருக்காமல், விரிந்த சமூக பார்வையில் அமெ ரிக்காவில் சாதி இருப்பதை, எழுத் தாளர் அருள்மொழி பதிவு செய்தி ருப்பதை குமார ராசா சுட்டிக்காட்டி னார். மக்கள் ஒற்றுமை மேடை அவி நாசி கிளையைச் சேர்ந்த சாய் கண் ணன் அந்த நூலை பெற்றுக் கொண் டார். அவிநாசி பேராசிரியர் போ. மணிவண்ணன், எழுத்தாளர் சம்சு தீன் ஹீரா ஆகியோர் இந்த நூலை அறிமுகப்படுத்தி பேசினர். சாதி குறித்து அமெரிக்கர்களுக்கு தெரியாது. ஆனால், இங்கிருந்து 50களில் அமெரிக்காவுக்கு சென்ற வர்கள் தான், சாதியைப் பற்றி அமெ ரிக்கர்களுக்கு புரிய வைத்திருக் கின்றனர். கற்ற சமூகம் தான் சாதியை நிலை நிறுத்த பார்க்கிறது. கலி போர்னியாவில் இருக்கும் சிலிக் கான் வேலி எப்படி சாதிய வேலி யாக பிரிக்கப்படுகிறது என்று இந்த நூல் அம்பலப்படுத்துகிறது. சாதி யத்திற்கு எதிராக மாற்றம் காண  இடதுசாரிகள் முயற்சிக்கும் வேளை யில், வலதுசாரிகள் சாதிய கட்ட மைப்பை பாதுகாக்க முழு வீச்சில் வேலை பார்க்கிறார்கள். சாதி  ஆணவக் கொலை, தொடர் பாலியல் வன்முறை, கடுமையான உழைப்பு  சுரண்டல் என சாதியத்தின் வெளிப் பாடு அமெரிக்காவில் இருப்பதை  சுட்டிக் காட்டுகிறது. பாடத்திட்டத் தில் இந்துக்களை தவறாக சித்த ரிப்பதாகவும், சாதி என்ற சொல்லை  நீக்க வேண்டும் என்றும் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர் அங்கு கடும் முயற்சி மேற்கொண்டு இருக்கின் றனர். ஆனால், அந்த சட்டத்தை மாற்றவில்லை, என்று பேராசிரியர் மணிவண்ணன் இந்த நூலை அறி முகப்படுத்தினார். எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா பேசு கையில், சாதிய ஒடுக்கு முறைக்கு மேலாதிக்கத்திற்கு எதிராக நாம் சில முன்னேற்றங்களை அடைந்தி ருக்கிறோம் என்று நினைத்தால், அமெரிக்காவில் சாதி என்ற நூலை படிக்கும் போது, நாம் போக வேண் டிய தூரம் வெகு தூரம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகி றது. அங்கு கோயில்கள் பன்னாட்டு நிறுவனங்கள் அளவுக்கு செல்வம் குவித்து வைத்திருக்கின்றன. அது ஒரு சமூக அதிகாரமாக, அங்கீகா ரம் பெற்று இருக்கிறது. அமெரிக்கா வின் இனவெறியும், இந்தியாவின் பார்ப்பனிய சாதிய கட்டமைப்பும் ஒன்றோடு ஒன்று கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன. அமெரிக்காவில் சாதி என்ற நூலை விரிவாக மக்களி டம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார். நிறைவாக நூல் ஆசிரியர்  அருள்மொழி ஏற்புரையாற்றுகை யில், சாதி இல்லை என்று பேசுகி றோம். ஆனால், பிறப்பிலிருந்து கல் யாணம், கருமாதி வரை வாழ்க் கையை வடிவமைப்பதில் சாதி இருக்கிறது. நன்கு படித்து வெளி நாட்டுக்கு போனால் இங்குள்ள ஒடுக்கு முறையில் இருந்து தப்பிக்க லாம் என நினைத்து முதல் தலை முறையினர் கனவுகளுடன் அங்கு  போய் இறங்குகிறார்கள். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு  சென்றவர்கள் சைவ உணவு கலாச் சாரம், கொலு வைப்பது என நுட்ப மாக சாதியை புகுத்தியுள்ளனர். சாதிய ஒடுக்குமுறை இருக்கிறது என்று பேசினாலே வெள்ளைக்கா ரனை விட பயங்கர வெள்ளைக்கார னாக அவர்கள் மாறி விடுகிறார்கள்.

இங்கிருந்து பிள்ளைகளை பார்க் கச் செல்லும் பெற்றோர்களும், எந்த ஊர், என்ன உணவு என்று ஆரம் பித்து வெளிப்படையாக கேட்கா மலே சாதியை புரிந்து கொள்கின்ற னர்.  நமது முந்தைய தலைமுறையி னர் போராடி உரிமையை பெற்று  தந்தார்கள். நம் அடுத்த தலை முறையை பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. வரு கின்ற வேலையை வேண்டாம் என  கைவிடுகின்றனர். பெண்களைத் திரட்டி சத்தியம் வாங்குகிறார்கள். புதிய நுட்பமாக சொத்தில் பங்கு  வேண்டாம் என்றும் எழுதி வாங்கு கிறார்கள், அமெரிக்காவுக்கு போய்  கணவரின் சுயம் தெரியும் பொழுது பெண்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்குப் போய் விடுகின்றனர். தகுதி, தனித்திறமை என்பதெல் லாம் சுரண்டிய கூட்டம் சொல்லிக் கொடுத்தது. நாம் போகும் பாதை கடினமானது. ஆனால் மக்களை முட்டாளாக வைத்திருப்பது எளிது.  சமூக ரீதியாக, பாலின, வர்க்க ரீதி யாக அடைந்த முன்னேற்றத்தில் தான் நாம் இந்த வாய்ப்பை பெற் றிருக்கிறோம், மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காதவர்களாக உள்ளனர் எனப் புரிந்து கொள்வதே நேர்மை, சாதி இடத்துக்குத் தக்க வடிவத்தை மாற்றி உயிரோடு இருக்கிறது, என்று அருள்மொழி கூறினார். கொ. ரகு நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். முடிவில், ரா.ராஜேந்திரன் நன்றி கூறினார்.