districts

img

கிராம உதவியாளரை தாக்கி நகை பறிக்க முயற்சி

சேலம், ஜூலை 24- ஆத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவ லகத்தில் பெண் கிராம உதவியாளரை தாக்கி  அவரது கழுத்தில் இருந்த நகைகளை பறிக்க முயன்ற இரண்டு இளைஞர்களை பொது மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (43).  இவர் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக் கன்பாளையம் தெற்கு கிராம நிர்வாக அலு வலகத்தில் கிராம உதவியாளராக பணி யாற்றி வருகிறார். கிராம நிர்வாக அலுவல ராக மணிவேல் பணியாற்றி வருகிறார். தமிழக முழுவதும் கலைஞர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் அதற் கான பணிகளை கிராம நிர்வாக அலுவலர் மற் றும் கிராம உதவியாளர் ஏற்பாடு செய்தி ருந்தனர். கிராம நிர்வாக அலுவலர் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் கிராம உதவியாளர் சங்கீதா அலுவலகத்தை பூட்டும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளர். அப் போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயற்சித்துள்ளனர். சங்கீதா அவர்களை தடுக்கவே ஆத்திர மடைந்த அவர்கள் அவரை சரமாரியாக தாக் கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சங் கீதாவிற்கு இரண்டு பற்கள் உடைந்தது.  இதில் இவரது அலறல் சத்தம் கேட்டு அரு கில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவ லகத்திற்கு வரவே, அங்கிருந்த நபர்கள் தப்ப முயன்றவர்களை மடக்கிப் பிடித்த பொது மக்கள், ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் காவல் நிலை யம் அழைத்து சென்றனர். மேலும், பலத்த காயமடைந்த கிராம உதவியாளர் சங்கீ தாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சங்கீதாவை தாக்கி யவர்கள் குருமூர்த்தி (22), மோகன்ராஜ் (28) என்பது தெரிய வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர் சங்கீதாவை ஆத்தூர் வட்டாட்சியர் மாணிக் கம் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சந் தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், விசாரணை யும் மேற்கொண்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலகத்தில் பெண் உத வியாளரிடம் இளைஞர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாயக்கன்பாளை யம் கிராமத்தில் புதிதாக அரசு மதுபான கடை உருவாக்கப்பட்டதன் பிறகு தான் இது  போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருவதாக அப்பகுதியினர் குற்றஞ் சாட்டியுள்ளனர்.