தருமபுரி, ஆக். 29- நில மோசடியால் பாதிக்கப்பட்டவர் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும் பத்துடன் தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டனர். இது குறித்து தீக்குளிக்க முயன்ற செளந் தர் கூறுகையில், தருமபுரி மாவட்டம், திப்பம் பட்டி அருகே வன்னியகுளத்தில் வசிக் கிறேன். எனக்கு சொந்தமான 27 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்தது . அதனால் எனது உறவினரான தருமபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அவரது கணவர் மாது மற்றும் அவரது மருமகன் முருகன் ஆகியோரிடம் உதவி கேட்டேன். அதற்கு அவர்கள், அந்த நிலத்தை முருகன் பெயரில் கிரையம் செய்து கொடுக்கும்படியும், தங்களுக்குள்ள செல் வாக்கை பயன்படுத்தி பிரச்சனையை முடித்து விடுவதாகவும், முடிந்ததும் திரும்ப கிரையம் செய்து கொடுத்து விடுவதாகவும் கூறினர். அதனடிப்படையில் நான், நிலத்தை முருகன் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத் தேன். பின்னர் பிரச்சனை தீர்ந்ததும் நிலத்தை திரும்ப கேட்டேன். ஆனால், முருகன் இந்த பிரச்சனையை முடிக்க நிறைய செலவாகி விட்டதால் ரூ. 23 லட்சம் தரவேண்டும் என்றும், அப்படி தரவில்லை எனில் அந்த நிலத்தை திரும்ப கிரையம் செய்து கொடுக்க முடி யாது என மிரட்டல் விடுத்தனர். இதனால், இரு தவணையாக ரூ. 23 லட்சத்தை கொடுத்தேன். பின்பு எனது பெயருக்கு கிரையம் செய்து கொடுத்தனர். தற்போது, எனக்கு உடல் நிலை சரி இல் லாத காரணத்தால், நான் கொடுத்த பணத்தை முருகனிடம் கேட்டேன். அதற்கு அடியாட் களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், எனவே, மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.