சேலம், டிச.12- ஆட்டையாம்பட்டி அருகே விவசாய கூலி தொழிலாளி கள் குடியிருந்து வரும் இடத்தை திமுக. மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் அபகரிக்க மிரட்டல் விடுப்ப தாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித் துள்ளனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சின்ன ஆண்டிபட்டி, அய்யனாரப்பன் கோவில் காடு பகுதி யில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருபவர் அலமேலு. இப்பகுதியில் மேலும் ஏழு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். அரசு புறம்போக்கு இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த திமுக கிளை பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி கிளை செயலாளர் நேரு மற்றும் முட்டி கந்தசாமி, ராஜா ஆகியோர் அபகரிக்கும் நோக்கில் செயல்படுவதாக பாதிக்கப்பட்ட அலமேலு உட்பட 7 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகத்திடம் புகார் அளித்துள்ளனர். மேலும், தங்கள் வசிக்கும் பகுதி அரசு புறம்போக்கு என்ப தால், அதற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளேன். இந் நிலையில், அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில் அருகி லுள்ள தோட்டத்திற்கு பாதை வசதி வேண்டும் என்று கார ணம் கூறி குடியிருப்பு பகுதிகளை அபகரிப்பதற்கான முயற்சி யில் ஈடுபடுவதாகவும், அதற்காக அவ்வப்போது அடியாட் களை அழைத்து வந்து தொடர்ச்சியாக அச்சுறுத்தலில் ஈடு படுகின்றனர். எனவே, தங்கள் நிலத்திற்கு பட்டா வழங்கி தங் களை பாதுகாக்க வேண்டும் எனவும் அலமேலு வலியு றுத்தி உள்ளார்.