districts

img

பழங்குடியின மக்களின் நிலத்தை அபகரிக்க முயற்சி தடுத்து நிறுத்த மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, பிப்.14- தருமபுரி மாவட்டத்தில் வசித்து  வரும் பழங்குடியின மக்களின் நிலத்தை அபகரிக்க முயற்சி நடப் பதை தடுத்து நிறுத்த வேண்டும், என மலைவாழ் மக்கள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் 33 ஆவது அமைப்பு தின விழா, வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் அலு வலகத்தில் நடைபெற்றது. மாவட் டத் தலைவர் ஏ.அம்புரோஸ் தலைமை வகித்தார். கோட்டப்பட்டி மலைக் கமிட்டி தலைவர் எஸ்.அண்ணா மலை வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சண்முகம் சங்கத் தின் கொடியை ஏற்றி வைத்தார். இதன்பின் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், மாநில துணைத்தலை வர் ஏ.கண்ணகி, மாவட்டச் செயலா ளர் கே.என்.மல்லையன், பொருளா ளர் எல்.வெங்கடேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் சோ.அருச்சுனன், மாவட்டத் தலைவர் எம்.குமார், மாவட்டப்  பொருளாளர் சி.வஞ்சி, துணைத் தலைவர் சி.சொக்கலிங்கம், ஒன்றிய நிர்வாகிகள் ஏ.நேரு, ஆர்.சின்னசாமி ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில், அரூர் வட்டம், சிட்லிங் மலைப்பகுதி கிராமங்களில் மலையாளி பழங்குடி மக்களின் நிலத்தை மாற்று சமூகத்தை சேர்ந்த  சிலர் பத்திரவுப்பதிவு செய்துள்ள னர். சட்டரீதியாக பழங்குடியினரின் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய  முடியாது. எனவே பழங்குடி மக்க ளின் நிலம் சட்டத்துக்குபுறம்பாக மாற்று சமூகத்தினரின் பெயரில் பத் திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அர சும் ரத்து செய்ய வேண்டும். பாலக் கோடு வட்டத்திற்குட்பட்ட ஊராட்சி களில் உள்ள சுமார் 40 கிராமங்களில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 5000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து வருகின்றனர். மிக வும் பின்தங்கிய நிலையில் வாழும் இந்த விவசாயிகளுக்கு, தமிழக அரசு சார்பில் அனைத்து சதிகளும் செய்து  தரப்பட்டுள்ளது. நூற்றாண்டு காலம் ஐந்து தலைமுறையாக விவசாயி கள், அவர்கள் குடும்பங்களின் உழைப்பு இந்த நிலத்தில் செலுத்தப் பட்டு, விளை நிலங்களாக மாற்றப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிலங்களை வருவாய் துறையினர் வனத்துறை யிடம் ஒப்படைத்து விட்டதாக கூறி விவசாயிகளை வனத்துறையினர் வெளியேற்ற முயற்சித்து வருகின்ற னர். மாமரங்களுக்கு வரி கட்ட  வேண்டும் என நிர்பந்தம் செய்கின்றனர். எனவே, 2006 ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட வன உரிமைச்சட் டத்தில், பிற சமுதாய மக்களுக்கும் வழங்கியுள்ள உரிமைகளின் படி அவர்களுக்கு நிலப்பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.