சேலம், செப்.20- அரியாக்கவுண்டம்பட்டி பகுதி யில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்பீலான பூங்கா நிலத்தை அபகரிக்கும் முயற்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி பொதுமக்களின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப் பட்டது. சேலம் மாநகராட்சி, 21 ஆவது வார்டுக்குட்பட்ட அரியாக்கவுண் டம்பட்டி பகுதியில் 1988 ஆம் ஆண்டு 63 வீட்டுமனைகள் பிரிக்கப் பட்டன. இதில் 20,604 சதுரஅடி கொண்ட சிறுவர் பூங்கா விளை யாட்டு மைதானம் ஒதுக்கீடு செய் யப்பட்டது. இந்நிலத்தினை சிங்கார வேலு என்பவர் போலியாக பத்திரம் தயாரித்தும், பட்டா வாங்கியும் நீதி மன்றத்தில் உண்மை நிலையை மறைத்து உத்திரவு வாங்கியுள் ளார். இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.7 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்த மான மாநகராட்சி பூங்கா நிலத்தை மீட்டு, சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தி நோட்டீஸ் வெளியிட்டு பொதுமக்க ளிடம் கையெழுத்து இயக்கம் நடத் தப்பட்டு, மாவட்ட ஆட்சியர், மாநக ராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். இதன்பின் மாநகராட்சி அதி காரிகள், காவல் துறையினர் சம்பந் தப்பட்ட நிலத்திற்கு நேரில் வந்து நிலம் அபகரிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதன்பின் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.பால கிருஷ்ணன் தலைமையில் சேலம் மாநகராட்சி ஆணையர் பாலச் சந்தரை, சந்தித்து ஏற்கனவே அறி விக்கப்பட்ட “நகருக்குள் வனம்” அமைக்கும் திட்டத்தை உடனடி யாக செயல்படுத்த வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. இதை யேற்று மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், போலி பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என சேலம் கோட்டாச்சியருக்கு உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், போலி பட்டாவை காரணம் காட்டி உண் மையை மறைத்து நீதிமன்ற உத்தரவு பெற்று, காவல்துறை அனுமதியோடு மீண்டும் முள் வேலி அமைக்க செவ்வாயன்று முற்பட்டனர். இதுகுறித்து தகவ லறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி. பாலகிருஷ்ணன் தலைமையில், ஊர் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், அனைத்து கட்சி நிர் வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று முள்வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் வந்த மாநகராட்சி அதிகாரி கள், கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோர் பூங்கா நிலத்தில் முள்வேலி போடுவதை தடுத்து நிறுத்தினர். மேலும், முள்வேலி அமைக் கப்பட்ட நபர்கள் செப்.21 ஆம் தேதி யன்று (இன்று) நேரில் ஆஜராகச் சொல்லி சேலம் வருவாய் கோட் டாட்சியர் கடிதம் அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து காவல்துறை யின் அறிவுறுத்துதலின் பேரில், சம்பந்தப்பட்ட நபர்கள் முள்வேலி அமைக்காமல் திரும்பிச் சென் றனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.பால கிருஷ்ணன், பி.சந்திரன், கிளைச் செயலாளர்கள் ஏ.ஜெயவேல், எம்.மூர்த்தி, வி.பிரகாஷ், அதிமுக சூரமங்கலம் இணைச்செயலாளர் எஸ்.மணி, ஞானபிரகாசம், கும ரேசன், பாலாஜி நகர் குடியிருப் போர் சங்க கதிர் மற்றும் விளை யாட்டு வீரர்கள் 100க்கும் மேற் பட்டோர் குவிந்தனர்.