districts

img

கரும்பு விவசாயிகள் மீது தாக்குதல்: விவசாய சங்கம் ஆவேசம்

நாமக்கல், செப்.27- தஞ்சையில் கரும்பு விவசாயி கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து புதனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம், திருமண்டங் குடி ஆரூரான் சர்க்கரை ஆலை நிர் வாகம் 4 ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு பாக்கி தொகையை விவ சாயிகளுக்கு தரவில்லை. மாறாக, விவசாயிகளின் பெயரில் வங்கிக ளில் ரூ.200 கோடி அளவில் கடன் வாங்கி மோசடி செய்ததுடன், விவ சாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடனுக்கு பிடித்தம் செய்த பணத் தையும் உரிய முறையில் வங்கிக ளுக்கு செலுத்தாமல் ஏமாற்றி விட் டது. ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் செயலை கண்டித் தும், தமிழக அரசு உடனடியாக தலையிட வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இதையடுத்து, கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வல மாக சென்றனர். அப்போது வழியி லேயே தடுத்து நிறுத்தியும், ஆட்சி யர் அலுவலகம் முன்பு கூடியவர் களை பலப்பிரயோகம் செய்து தாக்கி போலீசார் கைது செய்தனர். கரும்பு விவசாயிகளின் நியா மான கோரிக்கையை வலியுறுத்தி, ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்ற போராட்டத்தை சீர்குலைத்த போலீ சாரின் நடவடிக்கையை கண்டித்து, மாநிலம் முழுவதும் தன்னெழுச்சி யான ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இதன்ஒருபகு தியாக, நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு, அண்ணா சிலை முன்பு  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலப் பொருளா ளர் பி.பெருமாள், மாநில துணைத் தலைவர் எஸ்.நல்லாகவுண்டர், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் கே.பூபதி, ஆர்.வேலாயுதம், ஒன்றியத் தலை வர் ஏ.ஆர். முத்துச்சாமி, ஒன்றியச்  செயலாளர் மொளசி, கு.பூபதி, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் பி.தங்கரத்தினம், மற் றும் பயனீட்டாளர்கள் சங்க நடேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். உடுமலை இதேபோல் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலூக்காக்குழு சார்பில் புதனன்று நால் ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசா யிகள் சங்கத்தின் மடத்துக்குளம்  தாலூக்காச் செயலாளர் எம்.எம்.வீரப் பன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதணன், உடுமலை ஒன்றிய செய லாளர் பாலதண்டபாணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூக் காச் செயலாளர் ஆர்.வி.வடிவேல் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், திரளானோர் கலந்து கொண் டனர்.