மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தி யதை கண்டித்து, சிபிஎம் சேலம் மேற்கு மாநகரக்குழு சார்பில், சூரமங்கலம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.சந்திரன், பி.பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.