கோவை, ஜூன் 25- நெல்லையில் மார்க் சிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்தியதை கண் டித்து கோவை, நீலகிரியில் திராவிட தமிழர் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியி னர் மதன்குமார் தாட்சாயணிக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும், நெல்லை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கிய கும்பலை குண்டர் தடுப்பு சட்டத் தில் கைது செய்ய வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திராவிட தமிழர் கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் சி.வெண்மணி தலைமை தாங்கினார். இதில், தபெதிக பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, உதகை ஏடிசி திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இக்கட்சி யின் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமை ஏற்றார். தலைமை நிலைய செயலா ளர் பழ.பேரறிவாளன் கண்டன உரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல் சங்கர லிங்கம் விடுதலை சிறுத்தைகளை கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.