districts

img

சிபிஎம் நெல்லை மாவட்டக்குழு அலுவலகம் மீது தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 15- சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளை கொலைவெறியோடு தேடிய கும்பல், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட் டக்குழு அலுவலகத்தின் மீது தாக் குதல் நடத்தியதை கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து  வரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் 6 வருடமாக காதலித்து  வந்துள்ளனர்.

இவர்களின் திரும ணத்திற்கு பெண் வீட்டார் கடும்  எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவல கத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து, வெள்ளியன்று காவல் துறையின் பாதுகாப்போடு சார்பதிவாளர் அலு வலகத்தில், திருமணத்தை பதிவு செய்ய முயன்றனர். இதுகுறித்த தகவலறிந்த பெண் வீட்டார் மற்றும் சாதி சங்கத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலகத் திற்குள் நுழைந்து காவல்துறை யினர் முன்பாகவே மேஜை, நாற் காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனை தடுக்க முயன்ற மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் மீது தாக்குதல் நடத்தி யுள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தாக் கிய சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல்  மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண் டும். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என  வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு  மாநகரக்குழு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

மெய்யனூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வடக்கு மாநகரச் செய லாளர் என்.பிரவீன்குமார் தலைமை  வகித்தார். மாநகரக்குழு உறுப்பி னர்கள் வி.வெங்கடேஷ், பி.ராஜேஷ் குமார், வி.முருகானந்தம், பி.செந் தில்குமார் ஆகியோர் கண்டன வுரையாற்றினர். இதில் மாநகரக் குழு உறுப்பினர் ஆர்.வி.கதிர் வேல், கிளைச் செயலாளர்கள் எம். செங்கோடன், ஆர்.புருஷோத்த மன், டி.சிவக்குமார், எஸ்.சசிக் குமார், டி.ஞானவேல், பி.தனசேக ரன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

இதேபோன்று, நாமக்கல்  மாவட்டம், திருச்செங்கோடு அருகே  உள்ள எலச்சிபாளையம் பேருந்து  நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளை யம் மேற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சு.சுரேஷ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தேவராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் பி.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பி னர் பழனியம்மாள், ஒன்றியக்குழு  உறுப்பினர்கள் மாரிமுத்து, ரமேஷ், சத்திவேல், பாலகிருஷ்ணன், கந் தன் மற்றும் மோட்டார் சங்கப் பொரு ளாளர் சத்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.