districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பேக்கரி உடைப்பு - பாஜவினர் கைது

ஈரோடு, செப்.30- சத்தியமங்கலத்தில் பேக்கரியை உடைத்து சேதப் படுத்திய பாஜவினர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு சத்தியமங்கலத்தில், கடந்த 21ஆம் தேதியன்று  கடையடைப்பு போராட்டத்தின் போது கோட்டு வீராம்பாளை யத்தில் திறந்திருந்த பேக்கரி மீது கல்வீசி சேதப்படுத்தப் பட்டது.  இதுதொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு  செய்து சத்தியமங்கலம் கூத்தனூர் ரோட்டில் வசித்து வரும்  பாஜக சத்தி நகர பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் (23),  மீனவர் வீதியை சேர்ந்த பாஜக உறுப்பினர் யோகேஷ் (27), சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி சத்தி நகர தலைவர் அச்சுதன் (30)  ஆகியோரை கைது செய்தனர்.

நீரில் மூழ்கி மாணவன் பலி

 கோவை, செப். 30 -  கோவை பெருமாள் பதி கோவில் தடுப்பணை நீரில் மூழ்கி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (16). அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இந்நிலையில் வியாழனன்று தனது நண்பர்கள் 3 பேருடன்  ஆலாந்துறையை அடுத்த பெருமாள்பதி கோவில் தடுப்ப ணையில் குளிக்கச் சென்றனர். அப்போது நீரில் இறங்கிக்  குளித்துக் கொண்டிருந்த நவீன்குமார் திடீரென நீரில்  மூழ்கியுள்ளார். இதைக்கண்ட நண்பர்கள் அவரை காப்பாற்ற  முயன்றனர். ஆனால் மாணவர் நீரில் மூழ்கினார். சக நண்பர்கள் அளித்த தகவல் அடிப்படையில் ஆலாந்துறை போலீசார் மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு வீரர்கள் நவீன்குமார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதையடுத்து இறந்த நிலையில் மீட்கப்பட்ட நவீன் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆலாந்துறை போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணி: அமைச்சர் ஆய்வு

ஈரோடு, செப்.30- பெருந்துறையில் நடைபெற்று வரும் அத்திக்கடவு- அவிநாசி திட்டப்  பணிகளை வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி வியாழயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.  ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், முள்ளம்பட்டி, புதுப் பாளையம் பகுதியில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ், பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு மேற் கொண்டார்.  இதனைத்தொடர்ந்து செய்தி யாளா்களிடம் அவர் கூறுகையில், அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக பவானி ஆற்றின் குறுக்கே தடுப் பணை மற்றும் பவானி ஒன்றியம், நல்லக்கவுண்டம்பாளையம், பெருந் துறை ஒன்றியம் திருவாச்சி, போல நாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய ஆறு இடங்களில் நீருந்து நிலைய கட்டுமானப் பணிகள்  நடைபெற்று வருகின்றன. இத் திட்டம் விரைவாக முடிக்கப்பட்ட பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.  இத்திட்டத்தை செயல்படுத்தியதில் சிறுசிறு குறைகள் இருப்பதாக அலுவ லர்கள் தெரிவித்தனர். அதனடிப் படையில் தற்போது ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. திட்டப் பணிகளை விரைவாக முடித்திட அலுவலர் களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.  இந்த ஆய்வின்போது, ஈரோடு  வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார்,  அத்திக்கடவு-அவிநாசி திட்ட உதவி செயற்பொறியாளர்கள் சங்கர் ஆனந்த் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனி ருந்தனர்.

பல்லடத்தில் இன்று மின் தடை

திருப்பூர், செப். 30 - பல்லடம் துணை மின் நிலையத்தில் அக்டோபர் 1ஆம் தேதி  சனிக்கிழமை மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள் ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி  வரை பல்லடம் நகரம், மங்கலம் ரோடு, கொசவம்பாளையம் ரோடு, செட்டிபாளையம் ரோடு, மாணிக்காபுரம் ரோடு,  திருச்சி ரோடு ஒரு பகுதி, வடுகபாளையம், சித்தம்பலம்,  புள்ளியப்பன்பாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளை யம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளை யம், அனுப்பட்டி, அம்மாபாளையம், மகாலட்சுமி நகர் ஆகிய  ஊர்களில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகள் குறித்து பேச்சுப் போட்டி

திருப்பூர், செப். 30 - திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம், காந்தியடிகள் பிறந்த  நாளையொட்டி, பள்ளி மற் றும் கல்லூரி மாணவர்களுக் கானப் பேச்சுப் போட்டி  அக்டோபர் 12ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில், அண் ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற் றுமையில் ஒற்றுமை, பாரத  தேசமென்று பெயர் சொல்லு வோம் ஆகிய தலைப்புகளி லும், கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டி யில்,வாழ்விக்க வந்த எம் மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம் மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை என்ற  தலைப்புகளிலும் நடைபெ றும் என மாவட்ட ஆட்சியர்  எஸ்.வினீத் தெரிவித்துள் ளார்.

பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்ற பெண் பலி இழப்பீடு கோரி சாலை மறியல்

திருப்பூர், செப்.30– திருப்பூரில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த பெண்ணின் உயிர் இழப்பிற்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் சிவ லிங்கம். அவரது மனைவி அமுதா. திருப்பூர் மாவட்டம் முத் தூர் பகுதியில் உள்ள பழனிச்சாமி என்பவரது கரும்பு காட்டில்  20 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வந்துள்ளனர். இவர்களுடன் சிவலிங்கம், அமுதா ஆகியோரும் வேலை  செய்தனர். கரும்பு காட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது  கடந்த 22ஆம் தேதி அமுதாவை பாம்பு கடித்துவிட்டது.  இதற்காக திருப்பூர் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதன்கிழமை இரவு சிகிச்சை பலனளிக் காமல் அவர் உயிரிழந்துவிட்டார். மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காதே உயிர்  இழப்பிற்கு காரணம் எனவும், அமுதா பணிபுரிந்த கரும்புக் காட்டின் உரிமையாளர் பழனிச்சாமி இதுவரை எந்த உதவியும்  செய்து தராத நிலையில் உயிரிழப்பிற்கு தகுந்த இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தியும் உறவினர் கள் மருத்துவமனை முன்பாக வியாழக்கிழமை சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையி னர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  

பேருந்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சிறைப்பிடிப்பு

அவிநாசி, செப்.30 - அவிநாசி அருகே ஊருக்குள் வரா மல் இருந்த அரசுப் பேருந்தை கிராம மக் கள் வியாழக்கிழமை மாலை முற்றுகை யிட்டு சிறைப்பிடித்தனர்.  திருப்பூரில் இருந்து அவிநாசி சேவூரை அடுத்த தாளக்கரை, மங்கரச வலையபாளையம், பேரநாயக்கனூர் ஆகிய கிராமங்கள் வழியாக, ‘9ஜி’ வழித்தட அரசு புறநகர் பேருந்து புளி யம்பட்டிக்கு வழக்கமாக சென்று வந் தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக  இந்த பேருந்து கிராமங்களுக்குள் செல் லாமல் அடிக்கடி நேராக புளியம்பட் டிக்கு சென்றுவந்தது. இதையறியாமல்,  வியாழனன்று மாலை மூதாட்டிகளும், பெண்களும் தாளக்கரை கோவிலுக்கு செல்வதற்காகவும், மங்கரச வலையபா ளையம் கிராமத்துக்கு செல்வதற்காக வும் அந்த பேருந்தில் சென்றுள்ளனர். ஆனால் ஊருக்குள் செல்லாமல் அந்த பேருந்து நேராக புளியம்பட்டிக்குச் சென்றது. இதனால் தங்களது கிராமத் துக்குள் பேருந்து செல்ல வேண்டும் என  அவர்கள் கோரினர். இதையடுத்து புளியம்பட்டியில் இருந்து திரும்பிவரும்போது, அந்த  கிராமத்தின் வழியாக வந்து பெண் களை இறக்கி விட்டனர். இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் மாலை திரண்டு வந்து அரசு பேருந்தை முற்று கையிட்டு சிறைப்பிடித்தனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது. பின்னர், ஓட்டுநர் மற்றும் கண்டக்ட ரும் இனிமேல் ஊருக்குள் பேருந்து வரு வதாக கிராம மக்களிடம் உறுதியளித் தனர். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென் றனர். இது குறித்து கிராமப் பெண்கள் கூறு கையில், கிராமத்திற்குள் பேருந்து வரா தது குறித்து போக்குவரத்து அதிகாரி களிடம் புகார் மனு கொடுப்பதாக தெரி வித்தனர்.

அவிநாசியில் இன்று மின் தடை

அவிநாசி, செப். 30 – அவிநாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராம ரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (அக். 1)  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோ கம் தடைபடும் என்று மின் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அவி நாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபா ளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம் பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம்,  முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பா ளையம், சேவூர் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு,  வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டி புதூர், சக்தி நகர்,  எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம். 

வழக்கறிஞர் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தித் தர மாவட்ட நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை

திருப்பூர், செப்.30– திருப்பூர் மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக் கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் அமைத் துத் தர நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங் கத்தினர் மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜனிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். வெள்ளியன்று, அகில இந்திய  வழக்கறிஞர்கள் சங்கத் திருப்பூர்  மாவட்டத் தலைவர் கே.சுப்பராயன், செயலாளர் பி.மோகன், பொருளா ளர் ஒ.உதயசூரியன் ஆகியோர் திருப் பூர் மாவட்ட நீதிபதி சொர்ணம் நடரா ஜனிடம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்  வாசிப்பு வட்டத்தை ஏற்படுத்திக்  கொடுத்ததற்கும், பெண் வழக்கறி ஞர்களுக்கு ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் தனி அறை ஒதுக் கிக் கொடுத்தது, நீதித்துறை பணியா ளர் குழந்தைகள் காப்பகம் அமைத் துக் கொடுத்ததற்கும், நூலகம் அமைத்துக் கொடுத்ததற்கும் வர வேற்புத் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் எண்ம நூலகம்  அமைத்துத்தர வேண்டும், அனைத்து வசதிகளுடன் வழக்கறி ஞர்கள் அறை தனியாக கட்டித் தர  வேண்டும், இந்த வளாகத்தில் கைப் பந்து, இறகுப் பந்து விளையாட்டு மைதானங்கள் அமைத்துத் தரவும், அஞ்சல் நிலையம், வங்கி வசதி ஏற்ப டுத்தித் தரவும் வேண்டும். வழக்கறிஞர்கள் சந்திக்கும் நடை முறைப் பிரச்சனைகளை தெரிவிக் கவும், விரைவான நீதி பரிபாலனத் திற்கும் குறிப்பிட்ட கால இடைவெ ளியில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்ய வேண் டும், வழக்கறிஞர் கூட்டுறவு சங்கம்  ஏற்படுத்த வேண்டும், பழைய சார்பு  நீதிமன்ற வளாகத்தில் சிறார் நீதி குழு மம், நுகர்வோர் குறைதீர் ஆணை யம், தொழிலாளர் நீதிமன்றம் நிறுவ  வேண்டும், ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகத்தில் ஜெராக்ஸ், கேண்டின் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கு மாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இக்கோரிக்கைகள் குறித்து பரிசீ லித்து சாத்தியமான கோரிக்கை களை நிறைவேற்ற நீதிபதி சொர் ணம் நடராஜன் ஒப்புக் கொண்டதாக அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்க மாவட்டச் செயலாளர் பி. மோகன் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது துணைத்  தலைவர் எஸ்.ஏ.தமயந்தி,மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பொன் ராம், ஏ.அமர்நாத் ஆகியோர் உடன்  சென்றனர்.

முதியவர்  கொலை: 

திருப்பூர், செப்.30– கொங்கலக்குறிச்சி பேருந்து நிலையத்தில் சுமார்  60 வயது மதிக்கத்தக்க முதிய வர் தங்கி இருந்தார். வியா ழக்கிழமை இரவு அதே பகு தியைச் சேர்ந்த வீ.பழனியப் பன் (வயது 35) மது அருந்து வதற்காக பேருந்து நிலையத் திற்குள் வந்திருக்கிறார். இங்கு மது அருந்த வேண் டாம், வெளியே சென்று மது  அருந்துங்கள் என்று கூறியி ருக்கிறார். இதில் ஆத்திர மடைந்த பழனியப்பன், முதி யவரை கீழே கிடந்த குச்சி யால் கடுமையாக தாக்கி விட்டு அங்கேயே மது அருந் திவிட்டு சென்றார். வெள்ளி யன்று காலை பொது மக்கள்  பார்த்தபோது முதியவர் இறந்து கிடந்தார். இதைய டுத்து தளி காவலர்கள் பழனி யப்பனை கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை 

தருமபுரி, செப்.30- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு தருமபுரி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்  தண்டனை வழங்கி உத்தரவிட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தைச் சேர்ந்த ராமன் (60) என்பவர், 14 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பான புகாரின்பேரில் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்து ராமனை கைது செய்தனர். இந்த வழக்கு விசா ரணை தருமபுரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞர் கல்பனா ஆஜ ராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணை வியாழக் கிழமை முடிவுற்றது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ராமனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராத மும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

விபத்துகளை தடுக்க சாலையை சீரமைக்க கோரிக்கை

கோவை, செப்.30- சூலூர் பிரதான சாலை தோண்டப்பட்டு சீரமைக்கப்படாததால் அன்றாடம் விபத்து கள் நடைபெறுகிறது. இச்சாலையை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.  கோவை மாவட்டம், சூலூர் ரங்கநாதபுரம் தனியார் மில் அருகில்,கோவையில் இருந்து  திருச்சி நோக்கி செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அன்றாடம் ஆயிரக்கணக் கான வாகனங்கள் இந்த சாலையை  பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவி நாசி - அத்திகடவு திட்டத்தின் கீழ் செல்லும் குடி நீர் குழாயில் ஏற்பட்ட  பழுதை நீக்குவதற் காக  குழி தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பழுது பார்க்கப்பட்டுள்ளது. பழுதுபார்க்கப் பட்ட நிலையில் அந்த சாலைக்கு காங்கிரீட் மட்டும் கொட்டப்பட்டு குழியானது மூடப்பட் டது. அந்த காங்கிரட் மீது நெடுஞ்சாலைத் துறையினர் தார்ச்சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகி றார்கள். இரவு நேரங்களில் அந்த வழியாக செல் லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வரு கிறார்கள். மேலும் அவ்வப்போது இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்துக்குள் ளாவது தொடர் கதையாகி வருகிறது. 15க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இப்பகுதி யில் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நெடுஞ் சாலைத்துறை சேதமாகியுள்ள சாலையை சீர மைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காந்தியடிகள் தங்கிய இல்லம் நினைவகமாக மாற்றம்

கோவை, செப்.30- கோவையில் மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த ஜி.டி.நாயுடு குடும்ப இல்லம் மகாத்மா காந்தி நினைவகமாக மாற்றப்பட்டு  அவரது 153 ஆவது பிறந்த நாளான அக்.2 ஆம்  தேதியன்று (நாளை) திறக்கப்பட உள்ளது. மகாத்மா காந்தியடிகள் பல்வேறு நிகழ்ச் சிகள், கூட்டங்களில் பங்கேற்பதற்காக 3  முறை கோவைக்கு வந்துள்ளார். அதன்படி,  1934 ஆம் ஆண்டு கோவைக்கு வந்த மகாத்மா காந்தியடிகள் போத்தனூரில் உள்ள ஜி.டி.நாயுடுவின் குடும்ப இல்லத்தில் இரண்டு நாட் கள் தங்கியுள்ளார். தற்போது இந்த இல்லம் ஜி.டி.நாயுடு குழுமம் சார்பில் மகாத்மா காந்தி நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது. காந்தி நினைவகத்தில் மகாத்மா காந்திக்கும், கோவைக்கும் உள்ள தொடார்பை பிரதிப லிக்கும் வகையில் பல்வேறு வகையான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள் ளன. இங்கு தங்கியிருந்தபோது அவர் பயன் படுத்திய காலணிகள், ராட்டை, தட்டு, டம்ளர், படுக்கை, அலமாரி உள்ளிட்ட பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், மகாத்மா காந்தியின் பிறப்பு முதல் இறப்பு  வரை அவர் பங்கேற்ற நிகழ்வுகளின் புகைப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மகாத் மாவின் செயல்பாடுகள் ஒளி-ஒலி வடிவத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், காந்தியடிகளின் கொள் கையான கைத்தறி பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சர்வோதய சங்கம் சார்பில் கைத்தறி பொருட்கள் விற்பனை செய்யவும், அது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அக்.2ல் கிராம சபை

ஈரோடு, செப்.30- ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும் காந்தி பிறந்த தின மான அக்.2 ஆம்தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடை பெற உள்ளன. இக்கூட்டங்க ளில் கிராம ஊராட்சி நிர்வா கம், பொது நிதி செலவினம் மற் றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல் ஆகியவை நடைபெறும். இக்கூட்டங் கள் நடைபெறுவதை கண் காணிக்கும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய அலுவல கத்திலிருந்து பொறுப்பா ளர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர்.