districts

img

காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்

ஈரோடு, நவ.28- ஈரோட்டில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த அறிவி யல் கருத்தரங்கங்கில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். தமிழ்நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்ட பேரவை கூட்டம் சென்னிமலை, நாடார் சமுதாயக் கூடத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மேனாள் மாநிலத் தலைவர் பேராசிரியர் நா.மணி தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் இரா.சங்கர் வரவேற்றார். காலநிலை மாற்றம் குறித்து நச்சுனு நாலு கேள்வி என்ற தலைப்பில் முனைவர் நாராயணி சுப்பிரமணியன் கருத்துரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் திருப்பூர் வி.ராமமூர்த்தி, இயக்க செயல்பாடு களில் ஈடுபாடு சார்ந்த எழுச்சி உரையாற்றினார். ஈரோடு மாவட் டத்தின் 16 கிளை பொறுப்பாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். டிச.24 ஆம் தேதியன்று ஈரோடு மாவட்ட அறி வியல் இயக்க மாவட்ட மாநாடு சிறப்புடன் நடத்துவது என  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முற் போக்கு எழுத்தாளரான ரஞ்சிதா எழுதிய, “உலகின் மற்றொரு சந்தோசமான பெண்” என்ற புத்தகம் முனைவர் நாராயணி சுப்பிரமணியன் வெளியிட வி.பி.குணசேகரன் பெற்றுக் கொண் டார். இறுதியாக, மாவட்டச் செயலாளர் செ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.