districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரூ.7.42 லட்சத்தில் சத்துணவுக்கூடம் சி.கா.பாளையம் பள்ளியில் பணி தொடக்கம்

திருப்பூர், ஏப்.25- திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் உள்ள சின்ன  காளிபாளையம் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ரூ.7.42 லட்சம்  மதிப்பில் புதிய சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான வேலை  தொடங்கப்பட்டுள்ளது. திங்களன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே. கணேசன், ஒன்றிய பொறியாளர்  கற்பகம், ஊராட்சி மன்ற 9 ஆவது வார்டு உறுப்பினர் பர மேஸ்வரி, முன்னாள் வார்டு உறுப்பினர் சண்முகம், பள்ளி யின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒப்பந்ததாரர் கலந்து கொண் டனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை கொள்ளை

தாராபுரம், ஏப்.25 - தாராபுரம் வணிக வரி அலுவலக உதவியாளர் வீட்டின்  பூட்டை உடைத்து ரூ.7 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தாராபுரம் - அலங்கியம் சாலை, என்.ஆர்.எஸ். நகரை சேர்ந் தவர் ராஜதுரை (36). இவர்  மாநில வணிக வரி அலுவலக  உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மூன்று  நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூருக்கு விசே சத்திற்கு சென்றுள்ளார். விசேசம் முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 7 பவுன்  தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.  இது குறித்து ராஜதுரை தாராபுரம் குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து குற்ற வாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:30.67/60அடி நீர்வரத்து:273கன அடி
வெளியேற்றம்:116கனஅடி

அமராவதி அணை நீர்மட்டம்:54.73/90அடி.நீர்வரத்து:97கனஅடி
வெளியேற்றம்:15கன அடி

அலகுமலை ஜல்லிகட்டில் 500 காளைகள் பங்கேற்பு

திருப்பூர், ஏப். 25 - திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை கிராமத்தில் செவ்வாயன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 500 காளைகள் பங் கேற்றன. மாடு பிடி வீரர்கள் 400க்கும்  மேற்பட்டோர் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் சுமார் 40 பேர் காயம டைந்தனர். திருப்பூர் மாவட்டம், அலகுமலை யில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத் தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜல் லிக்கட்டு போட்டி நடத்த உள்ளூர் மக் கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனி னும் அரசு நிர்வாகம் ஏப்ரல் 25ஆம் தேதி  செவ்வாயன்று ஜல்லிக்கட்டு போட் டியை நடத்துவதற்கு அனைத்து ஏற்பா டுகளையும் செய்திருந்தது. மாநில அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங் கேற்று இந்த போட்டியைத் தொடக்கி வைத்தார். வழக்கத்தை விட பார்வை யாளர்கள் எண்ணிக்கை குறைவாக  இருந்தது. சுமார் 2000 பேர் பங்கேற் றனர். போட்டி தொடங்குவதற்கு முன்ன தாக அனைவரும் உறுதிமொழி எடுத்து  கொண்டனர். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய்  ஆகியோர் கலந்து கொண்டனர். விலங்குகள் கண்காணிப்பு குழு உறுப்பினர் மிட்டல் மற்றும் டாக்டர் அயுப்கான் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியினை கண்காணித்தனர். இந்த போட்டியை முன்னிட்டு அலகு மலை பகுதியில் 1300 போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாடுபிடி வீரர், மாட்டின் உரிமை யாளர் இருவருக்கும் முதல் பரிசாக  இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட் டன. போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமை யாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படு வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. போட் டியில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம டைந்து அதில் 10க்கும் மேற்பட்டோர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சைமாவில் இன்று விழிப்புணர்வு கூட்டம்

திருப்பூர், ஏப். 25 – திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் தில் புதனன்று (இன்று) எடையளவு மற்றும் பொட்டலப் பொருட்கள் சட்ட விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் எஸ்.சுகந்தி, முத்திரை ஆய்வாளர் கே.செல்வகுமார் ஆகி யோர் பங்கேற்று எடையளவு மற்றும் பொட்டலப் பொருட்கள்  சட்டம், முத்திரை விதிமுறைகள் குறித்து விளக்குகின்றனர். அத்துடன் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு  பெறுவதால் கிடைக்கும் சலுகைகள் மற்றும் சட்டப் பாது காப்பு, வர்த்தக முத்திரை தேர்ந்தெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து  வழக்கறிஞர் கிஷோர் பாலசுப்பிரமணியம் விளக்குகிறார். தொழில் துறையினர் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன் பெறு மாறு சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் கேட்டுக் கொண் டிருக்கிறார்.

நிலம் ஆக்கிரமிப்பு - வயதான தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி

 நாமக்கல், ஏப். 25- பத்து சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க கோரி வயதான தம்பதியினர் தீக்கு ளிக்கும் முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல், மங்களபுரத்தையடுத்த, தாண்டவராய புரத்தில் கூலி வேலை செய்து வருபவர்கள் தங்கவேல் (73),  சகுந்தலா (68) தம்பதியினர். இவர்களுக்கு சொந்தமான 10  சென்ட் நிலம் அப்பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை அதிமுக ஆட்சியில், அப்பகுதியை சேர்ந்த இருவர்  ஆக்கிரமிப்பு செய்து போலி பத்திரம் மூலம் விற்க முயற்சி  செய்ததாக தெரிகிறது.  இதுகுறித்து இந்த தம்பதியினர், மங்களாபுரம் காவல்  நிலையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப் பாளரிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதனால், மனம் வெறுத்த வயதான இந்த தம்பதி யினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடி யாக சுதாரித்த அப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, தண்ணி ஊற்றினர். பின்னர், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி  உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கையளித்து வீட்டிற்கு  அனுப்பிவைத்தனர்.  வயதான தம்பதியினர் திடீரென உடலில் மண்ணெண்னை  ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

தின்னரை குடித்த குழந்தை பலி

பள்ளிபாளையம், ஏப்.25- தின்னரை குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு சிறுமி சிகிச்சை  பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கல்லாங் காடு பகுதி சேர்ந்தவர் கோவிந்தராஜ். ஜவுளி கடையில் பணி யாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஞாயிறன்று வாகனத்திற்கு வர்ணம்  பூசுவதற்காக, கோவிந்தாஜ் சகோதரர் பெயிண்ட் மற்றும்   தின்னரை வாங்கி வைத்துள்ளார். இந்த தின்னரை, இரண்டு சிறுமிகளும் எதிர்பாராத விதமாக குடித்துள்ளனர். இதில், இரு வருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால், ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மற்றொரு குழந்தை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் அரசு  மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த குழந்தை உடலை  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.  தின்னரை குடித்த குழந்தை பலியான சம்பவம் அக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானையின் தந்தங்கள் கண்டெடுப்பு

கோவை, ஏப்.25- கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனசர கத்திற்குட்பட்ட நரசீபுரம்  பிரிவு, ரத்தப் பாறை வனப் பகுதியில் வனப்பணியாளர் கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது அங்கு இறந்த ஆண்  யானையின் மண்டையோடு, 2 தந்தங்கள் மற்றும் எலும்பு கள் கிடந்தது. இதை குறித்து  வனத்துறை உயர் அதிகாரி களுக்கு தகவல் தெரிவித் தனர்.  இதனையடுத்து, கோவை வனக்கோட்ட வன  விரிவாக்க அலுவலர் தலை மையில், ஆனைமலை புலி கள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் இறந்த ஆண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய் தார். இதில், ஆண் காட்டு யானை என்பதும், 5 முதல்  6 வயது வரை இருக்கலாம். மேலும் இந்த யானை இறந்து 90 முதல் 120 நாட் களுக்கு மேலாக இருக் கலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:30.67/60அடி 
நீர்வரத்து:273கன அடி
வெளியேற்றம்:116கன அடி 

அமராவதி அணை 
நீர்மட்டம்:54.73/90அடி.
நீர்வரத்து:97கனஅடி
வெளியேற்றம்:15கன அடி

பழங்குடியின மாணவி பாலியல் வன்கொலை?

உதகை, ஏப்.25- உதகை அருகே உள்ள தோடர் பழங்குடியினர் கிராமத்தில் வசிக்கும் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், உதகை அரசு கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு, தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் ஒளிபதிவாளருடன் உடற்கூராய்வு நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தவிட்டுக்கோடு மந்து பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி உதகையில் கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில், திங்களன்று பள்ளிக்குச் சென்ற மாணவி, மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் அவரை தேடி வந்தபோது, மாணவி வழக்கம் போல் வீட்டிற்கு செல்லும் சாலையையொட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பட்டார். இதன்பின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், மாணவி பள்ளிக்குச் சென்று மாலையில் வழக்கம் போல் வீடு திரும்பும் போது  மாணவியின் உறவினர் ராஜேஷ் குட்டன் என்பவர்  மாணவியிடம் காரில் அழைத்துச் சென்று வீட்டிற்கு விடுவதாகக்கூறினார். இதையடுத்து காரில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தி, கொலை செய்து காரை விட்டு தப்பித்துள்ளார் என தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட உறவினரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் உடற்கூராய்வு, தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் ஒளி பதிவாளருடன் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.

குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி

கோவை மாவட்ட ஆட்சியர் பேட்டி

சூலூர், ஏப்.25- கோவை மாவட்டத்தில் 35 குளங்களில் விவசாயிகள் வண்டல் மண்ணெடுக்க அனுமதி வழங்கியுள்ளதாக ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சு;y தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஜெ. கிருஷ்ணாபுரம், தாளகரை, கரையாம் பாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரி உ;s ளிட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர்களில்  பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. அறுவடைக்கு சில மாதங்களே இருந்த நிலையில், மரங்கள் சரிந்ததால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விவசாயிகளின் தோட்டங்களுக்கு வரு வாய்த் துறை அதிகாரிகள் சென்று பார்வை யிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத் தனர். இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட  ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, திங்களன்று  பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாய்ந்து கிடந்த  வாழை மரங்களை நேரில் பார்வையிட்டார். அப்போது ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.  முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆட்சியர் கிராந்தி குமார்  பாடி பேசுகையில், பயிர் காப்பீடு செய்துள்ள  விவசாயிகளுக்கு முழு நிவாரண தொகை யும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஆவண செய்யும். காப்பீடு செய்யாத பயிர்களுக்கும் அரசிடம் எடுத்துரைத்து இழப்பீடு பெற்று தர நடவடிக்கை செய்யப்படும். மேலும், விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் தேவைப்பட்டால் உரிய அனுமதியுடன் குளங்களில் எடுத்துக் கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் 35 குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.  மேலும், விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் வட் டாட்சியரிடம் வழங்கி மண் எடுக்க அனுமதி  பெற்றுக் கொள்ளலாம் என்றார். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சிய ருடன் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்த சாமி மற்றும் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முத்து மாணிக்கம்,  வட்டாட்சியர் நித்தில வள்ளி, ஜெ.கிருஷ்ணா புரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா வீர முத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

விஷ வண்டு கடித்து 13 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

சேலம், ஏப்.25- ஆத்தூர் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தில் 200க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்த போது, விஷ வண்டுகள் கடித்து 13 பேர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓடைப்பகுதியில் செவ்வா யன்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு முட் புதரிலிருந்து பெரும் கூட்டமாக விஷ வண்டுகள் வேகமாக துரத்தியதில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பொது மக்கள் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். அப்போது விஷ வண்டுகள் கடித்ததில் செல்லம்மாள், முத்தம் மாள், தங்கமணி, சுபா, அஞ்சலை, பெரியம்மாள், செல்லம் மாள், ராஜாமணி, பிரியா, செல்லம்மாள், சிவா, சங்கீதா, அழகம்மாள் உள்ளிட்ட 13 பேர் ஆத்தூர் அரசு தலைமை  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதையறிந்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களும், அரசு அதிகாரிகளும் உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வை யிட்டு ஆறுதல் கூறினர். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட் டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மக்களை விஷ வண்டு கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி யுள்ளது.

மேற்கூரை இல்லாத பேருந்து நிறுத்தம் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தவிப்பு

கோவை, ஏப்.25- பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டியில் கொளுத்தும் வெயிலில் மேற்கூரை இல்லாத பேருந்து நிறுத்தத்தில் காத்தி ருக்கும் பொதுமக்கள், பள்ளி மாணாக்கர்கள் பெரும் சிர மத்திற்குள்ளாகி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய  நெடுஞ்சாலையில் உள்ள ஊஞ்சவேலாம்பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உடு மலை, பழனி, திண்டுக்கல், தாராபுரம், கரூர் போன்ற பகுதி களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால், வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும். பள்ளி,  கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள், அன்றாட பணிக ளுக்கு செல்வோர் அப்பகுதியில் கட்டப்பட்ட பேருந்து நிறுத் தத்தில் காத்திருந்து, தாங்கள் செல்ல வேண்டிய இடங்க ளுக்கு பயணம் செய்து வந்தனர் இந்நிலையில், சில நாட்க ளுக்கு முன்பு மேற்கூரை கீழே விழுந்து சேதமடைந்தன.  அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்என  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது கடும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்போர் மிகுந்த  அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக பேருந்து நிறுத்தத்திற்கு மேற்கூரை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைக்குழந்தையை பாதுகாத்த போக்குவரத்து காவலருக்கு பாராட்டு

கோவை, ஏப்.25- கோடை வெயிலால் அவதிப்பட்ட இளம்பெண் வைத்தி ருந்த கைக்குழந்தையை வாங்கி வைத்திருந்த போக்கு வரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதி யைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும்  தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார். அப்போது இளம் பெண் வெயிலின் தாக்கத்தால் அப்பெண் அங்கிருந்த போக்கு வரத்து காவலருக்கான நிழற்குடை நிழலில் வந்து நின்றார். அப்போது இளம்பெண் வைத்திருந்த கைக்குழந்தையை  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் கிஷோர்குமார் (27) வாங்கி கொண்டு, இளம்பெண்ணை அங் கிருந்த இருக்கையில் அமரக்கூறியதோடு, தண்ணீர் வாங்கி  கொடுத்துள்ளார். இதையடுத்து அவரது தாய் வாங்கி வந்த உணவை சாப்பிடும் வரையிலும், சுமார் 20 நிமிடங்கள் குழந் தையை காவலர் கிஷோர்குமார் தூக்கி வைத்திருந்தார். கடும் வேலைக்கும் இடையே போக்குவரத்து காவலரின் மனித நேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆன்லைன் முதலீடு: பட்டதாரியிடம் மோசடி

கோவை, ஏப்.25- ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என  ஆசைகாட்டி பட்டதாரி இளைஞரிடம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (34),  பி.இ., பட்டதாரி. இவர் ஆன்லைனில் பதிவு செய்து வேலை  தேடி வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந் தது. அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்த போது, அவரது எண் டெலிகிராம் குழுவில் இணைக்கப்பட் டது. பின்னர் ஆன்லைன் மூலம் முதலீடு செய்து பணிகளை முடித்து கொடுத்தால், அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய ராம்குமார் வெவ் வேறு கட்டங்களாக அதில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.30,04,204 பணம் அனுப்பி பணிகளை செய்து கொடுத்தார்.  ஆனால், அவருக்கு எந்த விதமான வருமானம் கிடைக்க வில்லை. போலியான லிங்க் அனுப்பி ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் என கூறி பணத்தை மோசடி செய்துள்ளனர். இத னால் அதிர்ச்சியடைந்த ராம்குமார் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

வாய்க்காலில் குளித்த இளைஞர்கள் பலி

ஈரோடு, ஏப்.25- கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இரு வாலிபர்கள் உயிரி ழந்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே திருவள்ளுவர் மற்றும் பாரதியார் வீதியைச் சேர்ந்தவர்கள் முகமது ரிஸ் வான் (21) மற்றும் முகமது சுபேர் (22). இவர்கள் காஞ்சிக் கோவில் காவல் எல்லைக்குட்பட்ட கருக்கம்பாளையம் பகுதி யில் எல்பிபி வாய்க்காலில் ஞாயிறன்று மாலை குளித்துக்  கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீ ரின் ஆழமான பகுதிக்கு சென்ற போது நீரில் மூழ்கி விட்ட னர். உடன் வந்தவர்கள் அவர்களது பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த உறவினர்கள் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடி பார்த்தனர். உடல்கள் கிடைக்காததால் அடுத்த நாள் சம்பவ இடத்திற்கு வந்து மீண்டும் தேடிப் பார்த்தனர். அப்போது கருக்கம்பாளையம் பாலத்தின் மேற்புறத்தில் முகமது சுபேரின் உடலும், கீழ் புறம் முகமது ரிஸ்வானின் உடலும் கிடைத்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறுநாளே பெயர்ந்த புதிய தார்ச்சாலை

உதகை, ஏப்.25- கூடலூர் அருகே அமைக்கப்பட்ட மறுநாளே தார்ச்சாலை பெயர்ந்ததால் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி மார்க்கெட் பகுதியிலிருந்து கோரஞ்சால் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் சுமார் 600 மீட்டர் தூரத்தை ரூ.16 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணி கள் நடைபெற்றது. இந்நிலையில், செவ்வாயன்று காலை புதிதாக மேம்படுத்தப்பட்ட சாலை பெயர்ந்துள்ளதை கண்டு  பொதுமக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தரமில்லாத பணியின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டினர். இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமா தானப்படுத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என  உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

உதகையில் போக்குவரத்து மாற்றம்: ஆட்சியர் தகவல்

உதகை, ஏப்.25- கோடை சீசனை முன்னிட்டு, உதகை யில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள் ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் கூடு தல் அலுவலகத்தில் கோடை சீசனுக் கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட் சியர் சா.ப.அம்ரித், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் உதகையில் நடை பெற்றது. இதில் செவ்வாயன்று இரவு 12 மணி முதல் கோடை சீசன் முடியும் வரை உதகையிலிருந்து மேட்டுப் பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், அதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் வழியாகவும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் சுற்றுலா பயணிகளின் வசதிக் காக அரசு போக்குவரத்து கழகம் சுற்று  பேருந்துகளை இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகருக்குள் வரவும் தடை விதிக்கப்படு கிறது. கோடை சீசனுக்காக பல்வேறு பகுதிகளில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப் பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தேவை யான குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார்.

மதுக்கடை மூடல்

சேலம், ஏப்.25- உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மே 1 ஆம் தேதி யன்று மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அர சால் தெரிவிக்கப்பட்டுள் ளது. எனவே எப்எல்1, எப்எல்2, எப்எல்3, எப்எல்3ஏ மற்றும் எப்எல்3ஏஏ உரிமம் பெற்ற  ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், மே 1 ஆம் தேதி யன்று மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.