districts

img

கேரளாவில் சிபிஎம் செயலாளர் படுகொலை : ஆர்எஸ்எஸ் கும்பல் வெறியாட்டம்

பத்தினம்திட்டா, டிச.3- கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பகுதிக்குழு செயலாளர் பி.பி. சந்தீப்குமார்,  ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் பாஜகவின் ஆதரவு தளம் தொடர்ந்து சரிந்து வருகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்களில் இருந்த பலரும் அவற்றிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து வருகின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பெரிங்கரா பஞ்சாயத்தை மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மேலும் அப்பகுதி மக்கள் மத்தியில் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு பெருகி வந்தது. பெரிங்கரா பகுதிக்குழு செயலாளராக (36 வயது) தோழர் பி.பி.சந்தீப் குமார் இருந்து வந்தார். இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும், 2 மாதமே ஆன ஒரு குழந்தையும் இருக்கிறது. பெரிங்கரா பகுதியில்  சாதி, மத, கட்சி பேதமின்றி மக்கள் நலப்பணிகளைச் செய்து வந்தார். கொரானோ காலத்திலும் ஓடி ஓடி மக்கள் பணிநலப்பணி செய்து வந்தார்.

இதனால் அப்பகுதி மக்களிடையே கட்சிக்கும்,  பி.பி.சந்தீப் குமாருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக, இதே பகுதியில் பாஜகவிலிருந்த முக்கிய பிரமுகர்கள் 20 பேர் பாஜகவிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதே போன்று பெரிங்கரா பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின்  பெருங்காரா பகுதி குழு மாநாட்டில் பகுதிக்குழு செயலாளராக பி.பி.சந்தீப் குமார் தேர்வு செய்யப்பட்டார். இதனால் மேலும் ஆத்திரமுற்ற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பல் பி.பி.சந்தீப் குமாரைப் படுகொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறது. அதன்படி அவரது நடத்தையைக் கண்காணித்து வந்த ஆர்எஸ்எஸ்கும்பல் வியாழனன்று இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சந்தீப் குமாரை வெட்டி படுகொலை செய்தது.இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியி ருக்கிறது. படுகொலையைக் கண்டித்து அப்பகுதி முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பின்னணி முன்னதாக, இந்த படுகொலைக்கான திட்டத்தில் பாஜகவின் மாநில தலைவருக்கும் பங்கு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நவம்பர் 30ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் மற்றும் சிலரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றார்். அதில்  எப்படியாவது பாஜகவைக் கேரளாவில்  நிலை நிறுத்த வேண்டும். அதற்காக பல்வேறு திட்டங்கள் திட்டங்களைத் தீட்டியிருக்கின்றனர்.  அதன் ஒருபகுதியாகவே பி.பி.சந்தீப் குமாரின் கொலை திட்டமும் இருந்திருக்கலாம் எனக் கேரளாவின் பிரபல சமூக ஊடகம் டி21 தெரிவிக்கிறது.  அத்திட்டத்தின்படி ஏற்கனவே 20 கிரிமினல் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டு சிறையிலிருந்த சிஸ்னுவை அழைத்து வந்திருக்கின்றனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த அவர் பெரிங்கராக பாஜக இளைஞரணி தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது தலைமையில் பிரோமோத், நந்து, பைசல் உள்ளிட்ட  5 பேர் கொண்ட ஆர்எஸ்எஸ் கிரிமினல் கும்பல் பி.பி.சந்திப்பைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி வியாழனன்று இரவு 8 மணியளவில் கட்சி பணி முடித்து பைக்கில் திரும்பிக் கொண்டிருந்த சந்தீப் குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கின்றனர்.  இக்கொலையில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் கிரிமினல் கும்பலைச் சேர்ந்த சிஸ்னு, நந்து, பிரமோத், பைசல் ஆகிய நான்கு பேரைக் கேரள காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.