ஈரோடு, ஆக.30- சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலையிலிருந்து வெளியா கும் புகையால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவ தாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈ.குட்டப்பாளை யம் கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத னருகில் உள்ள சிப்காட் வளாகத்தில் செயல்படும் சில தொழிற் சாலைகளிலிருந்து நச்சுபுகை வெளியாகிறது. இப்புகையால் அப்பகுதி மக்களுக்கு அடிக்கடி மூச்சுதிணறல் ஏற்படுகிறது. பள்ளி படிக்கும் மாணவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படு கின்றனர். எனவே, அப்பகுதியில் செயல்படும் தொழில் நிறுவ னங்களை ஆய்வு செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஈ.குட்டப்பாளையம் கிளை சார்பில் சிப்காட் டில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன், தாலுக்காச் செயலாளர் செ. அஜித்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுக்காத் தலை வர் கே.குப்புசாமி, மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.