districts

நம்புங்கள்! இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது

இந்துத்துவம் எழுச்சி பெற்ற காலங் களில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்க்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்பு களின் தொண்டர்களே அதை அவர்கள் பாணியில் வளர்த்தார்கள். லவ் ஜிகாத், கர் வாப்சி, கரசேவை, மாட்டுக்கறி உணவு என  பெரும் கும்பல் வன்முறை கலவரங்களில் ஈடுபட்டு பாஜக வளர்ச்சிக்கு பாடுபாட்டார் கள். இது மோடியின் இமேஜுக்கு டேமே ஜாக இருந்ததால் இந்த பத்தாண்டுகளில் ஏகப்பட்ட சட்டங்களை திருத்தி அரசு இயந் திரத்தை இந்து தேசியவாதத்தின் நிரலுக் குள் கொண்டு வந்தார். முன்னர் இந்த அமைப்புகளின் தொண் டர்கள் செய்ததை இப்போது அரசு அதிகாரி களே செய்கிறார்கள். புல்டோசர் எதிர் வினைகளும், ரெய்டுகளும் அதன் வெளிப் படையான தோற்றங்கள். மிசா, தடா, பொடா, உஃபா போன்று ஆள் தூக்கிச் சட்ட மாக PMLA  எனப்படும் மணி  லாண்டரிங் சட்டம் மாற்றப்பட்டுள்ளது. கடந்த 14 மாதங்களுக்கும் மேலாக  தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிறையில் உள்ளார். சத்தியேந்திர ஜெயின், மணிஷ் சிசோடியா, செந்தில்பாலாஜி, ஹேமந்த் சோரன்,கவிதா,அரவிந்த் கெஜ்ரி வால் என எண்ணற்ற தலைவர்களை சிறை களில் அடைத்து விட்டு காங்கிரஸ் கட்சி யின் வங்கிக் கணக்கை முடக்கி விட்டு தேர் தலை சந்திக்கிறது பாஜக. ஒன்றிய உளவுத்துறை அனுப்பிய ரிப் போர்ட்டில் மிக மோசமான தோல்வியை  பாஜக சந்திக்கும்  என்கிறது அதைத்தான்  சுப்பிரமணியன்  ஸ்வாமி போன்றோரும். ராகுல்காந்தி மேடையிலும்  சொன்னார். 180  தொகுதிகள் பாஜக வெல்லுமா என்பதே சந்தேகம்தான். இந்தியா கூட்டணிக் கட்சி களை தேர்தல் நெருங்க நெருங்க களத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு  தான் மட் டும் போட்டியிட்டு வெல்ல நினைக்கிறார் மோடி. ஆனால், நம்மில் பலர் மோடி 400  தொகுதிகள் வெல்ல மாட்டார் ஆனானா னால்ல்ல்ல்… என நம்பிக்கையற்று இழுக்கி றார்கள்.மோடியை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை கொள் ளுங்கள்.  இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது என நம்புங்கள் அதை களத் தில் செயல்படுத்துங்கள்!

ஒரே நாளில் 58 புகார்கள்...

ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படை யினர் வீதம் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது. இது தவிர தேர்தல் விதி  மீறல்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலி, டோல்பிரி எண் ஆகியவற்றில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஈரோடு மாவட்டத்தில், சனி யன்று காலை முதல் ஞாயின்று காலை  வரை 24 மணி நேரத்தில் 58 விதி மீறல் தொடர்பான புகார்கள் வந்துள்ளது. கட் டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண் ணுக்கு 39 புகார்களும், சி விஜில் செயலி மூலம் 19 புகார் என மொத்தம் ஒரே  நாளில் 58 புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.