districts

img

கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் விழா

கோவை, ஜூன் 3- முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கரு ணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் திமுகவினர் பல் வேறு இடங்களில் கொண்டாடினர். தமிழக முன்னாள் முதலர்வரும், திரா விட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலை வருமான மறைந்த கலைஞர் மு.கருணா நிதியின் 99 ஆவது பிறந்தநாளை தமிழக அரசு மற்றும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதன்ஒருபகு தியாக கோவை மாவட்டத்தில் திமுக வினர் பல்வேறு இடங்களில் கலைஞர் உரு வப்படத்திற்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி உள் ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  இதேபோன்று கோவை மாநகராட்சி வளாகத்தில் கலைஞர் உருவப்படம் மலர் களால் அலங்கரிக்கப்பட்டு மாலை அணி வித்து மலர் அஞ்சலி செலுத்தினர். இதில்  கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப் மற்றும் மண் டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர். பொள்ளாச்சி இதேபோன்று பொள்ளாச்சியில் திமுக நகர தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஆதிதிராவிட நலக்குழு மாநிலக் குழு உறுப்பினர் ஆறுச்சாமி, திமுக  மாவட்ட  இளைஞரணி துணை அமைப்பாளர் ரா.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட திமுகவி னர் ஏராளமானோர் பங்கேற்றனர்.